அதிமுக பொன்விழா கொண்டாட்டம்... ஓபிஎஸ், இபிஎஸ் பங்கேற்பு! (படங்கள்)

அதிமுகவின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகக் கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை புரிந்த வண்ணம்உள்ளனர். இன்று காலை தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றிவைத்தனர். அதேபோல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொன்விழா ஆண்டு மலர்வெளியிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்திலிருந்து மெரினா கடற்கரைக்குச் சென்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="30f4b7aa-560e-47d1-a99b-785afd973de5" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_179.jpg" />

admk jayalalitha ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe