Skip to main content

கரோனா நிவாரண அரசு நிதியை அ.தி.மு.க. வார்டு செயலாளர் மக்களுக்கு வினியோகம்

Published on 05/04/2020 | Edited on 05/04/2020

சாவு வீட்டிலும் கூட அரசியல் நடத்த தயங்க மாட்டார்கள் அரசியல்வாதிகள் என்பது இந்த சம்பவம் ஒன்றே சாட்சி என்கிறார்கள் மக்கள். கரோனா வைரஸ்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்திய மக்களுக்கு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டது மத்திய அரசு.தமிழ்நாட்டிலும் இது தொடர்கிறது.

 

AIADMK to donate Corona Relief Government Fund Distribution of ward secretary to the people


வறுமையினால் வாடுபவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், அன்றாடம் கிடைக்கும் வேலைக்கு உழைத்து அன்றைய தினத்தின் பசியை போக்கும் அப்பாவி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்துவிட்டால் அவர்கள் உணவுக்கு எங்கே போவார்கள்? அவர்களுக்கு நிவாணம் கொடுப்பது அரசின் கடமை அதை உடனே செய்ய வேண்டும் என தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க. தொடங்கி கம்யூனிஸ்ட் கட்சிகள் என மக்கள் நலன் சார்ந்த இயக்கங்கள் அரசுக்கு கோரிக்கையும் வேண்டுகோளாகவும் குரலை உயர்த்தி கேட்டது. அதன் பலனாக இங்குள்ள மாநில எடப்பாடி அரசு ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்குவதோடு வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ரேசன் கடையில் அரிசி பெறும் கார்டு வைத்துள்ள அணைவருக்கும் கரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஆயிரம் ரொக்கமாக கொடுப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

ரேசன் பொருட்கள் நேரடியாக கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் எனவும் பணம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேசன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் என அரசு உத்தரவு வந்தது. இதில்தான் அரசியல் செய்கிறது ஆளும் அ.தி.மு.க. மக்களுக்கு நிவாரண நிதியாக அரசு கொடுக்கும் பணம் என்பது மக்களின் வரிப்பணம் இது ஏதோ அ.தி.மு.க.வினர் முன்பு ஒட்டு வாங்க ஒட்டுக்கு பணம் கொடுத்தது போல் களத்தில் இறங்கி கொடுக்க தொடங்கி விட்டனர். அப்படியொன்று தான் இந்த சம்பவம்,

 

AIADMK to donate Corona Relief Government Fund Distribution of ward secretary to the people


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 23 வது வார்டு பகுதியில் நிவாரண தொகை ரூபாய் 1000 ரேஷன் கடை ஊழியர்கள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்காமல் அந்த வார்டு அதிமுக செயலாளர் முகமது யூசுப் என்கிற முபாரக் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நான்காம் தேதி காலை முதல் மாலை வரை முபாரக் தனது அலுவலகமாக  வைத்திருக்கும் அவரது ஜெராக்ஸ் கடையில் வைத்து அந்தப் பகுதி மக்களுக்கு நிவாரண பணம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.  அந்த வார்டு பொதுமக்கள் ஆண் பெண் என எல்லோரையும் வரிசையில் நிற்க வைத்து அவரது கடையில் இருந்து 1000 ரூபாய் வினியோகிக்க தொடங்கினார்.

இதைக்கண்ட பொதுமக்களில் சிலர் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கூறினார்கள். அரசின் நிவாரண நிதி எப்படி ஆளுங்கட்சி அதிமுக வார்டு செயலாளர் கொடுக்கலாம் என கேள்வி எழுப்ப, அந்தப் பகுதிக்கு வந்த கோபி வருவாய் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்சிக்காரர்களிடம்  நீங்கள் நேரிடையாக கொடுக்க வேண்டாம் ரேஷன் கடை ஊழியர்கள் கொடுக்கட்டும் நீங்கள் வேண்டுமானால் ரேசன் கடை பணியாளர்களோடு  சென்று பொதுமக்கள் யார், யார் என அடையாளம் காட்டுங்கள் என்று  மறைமுகமாக நீங்கள் தலைமையேற்று செல்லுங்கள் என அதிகாரிகள் கூறிவிட்டு சென்று விட்டனர். அதன்பிறகு அவரது கடையில் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு வீதியாக சென்று குறிப்பிட்ட ஒரு இடத்தில் நின்று கார்டுதாரர்கள் ஐந்து ஆறு பேரை வரவழைத்து ஊழியர்கள் முன்னிலையில் மீண்டும் பணம் கொடுத்தார். 

எந்தந்த நடவடிக்கைகளில் அரசியல் செய்வது என்பதெல்லாம் இல்லாமல் இந்த நிவாரண உதவியை கூட அதிமுக அரசியல் செய்தது அவலமாக தெரிகிறது. என பணம் பெற்ற மக்களே திட்டிக் கொண்டு சென்றனர். கோபிசெட்டிபாளையம் பகுதி அதிமுகவின் சீனியர் அமைச்சரான செங்கோட்டையின் ஊர். அவரது ஏற்பாட்டின் அடிப்படையிலேயே அதிகாரிகள் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் மூலம் நிவாரண உதவியை கொடுத்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் மட்டுமல்ல ஈரோட்டிலும் ஏன் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதிமுக நிர்வாகிகள் நேரில் நின்று ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக் கிடக்கும், வேலை இழந்த அப்பாவி பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாயை ஏதோ இவர்கள் வீட்டு பணம் போல் கொடுத்து வருகிறார்கள் என்பது தான் பரிதாபம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.