Skip to main content

அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்! போலீசில் புகார்!!

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
AIADMK district women's secretary! Report to the police !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட மகளிரணி  செயலாளருக்கு இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலக்குண்டு காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி. அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். இவர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நேற்று தனது  வீட்டின் முன்பு வந்த அடையாளம் தெரியாத  இளைஞர்கள் இருவர் செய்தியாளர்கள் என கூறிக்கொண்டு செல்போனில் வீட்டை பலமுறை படம் எடுத்ததாகவும், ஏன் படம் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு  தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், மேலும்  தொடர்ந்து அப்பகுதியில் தனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்  வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது சம்பந்தமாக வளர்மதியிடம் கேட்டபோது,  இந்த பிரச்சனை குறித்து மாமா ( வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்) ஆபீசுக்கு தகவல் சொன்னேன். போலீசுக்கு புகார் கொடுக்கச் சொன்னார்கள் நானும் போலீஸ் ஸ்டேஷன் போய் பல மணி நேரம் காத்திருந்தும் இன்ஸ்பெக்டர் புகாரை வாங்கவில்லை. கடைசியில் சப்-இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுத்துட்டு வந்தேன். என்னைப் பழிவாங்கத் துடிக்கும் உள்ளூர் அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருவர் எனக்கு பல்வேறு வகைகளில் தொல்லைகளைக் கொடுத்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலில் இருக்கும் என்னை, கட்சியை விட்டு விரட்டுவதற்கு படாதபாடுபடுகின்றனர். வத்தலக்குண்டை பொறுத்தவரை அவர்கள் வைத்ததே சட்டம் என்பதால் அமைச்சர் அலுவலத்தில் இருந்து சொல்லியும், அதிகாரிகள் புகாரினை  வாங்க மறுப்பதாகவும் கூறினார்.

அதிமுகவில் முன்னோடிகள் யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. ஆனால் எங்களை போல் உள்ள மகளிர் அணியினர்களுக்கு எல்லாம் அம்மா (ஜெ) இருந்தா  இந்த நிலைமை வந்து இருக்காது என்று  வருத்ததுடன் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.