Skip to main content

முதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்!

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

 AIADMK  distribute sarees door to door in edappadi

 

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே, அதிமுகவினர் முதல்வரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சேலை விநியோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை பிப். 26ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

 

தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது அரசியல் கட்சியினர் மக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில்  அதிமுகவினர் வெள்ளிக்கிழமை (பிப். 26) இரவில் வீடு வீடாகச் சென்று சேலைகளை வழங்கினர்.

 

சேலைகளை ஒரு பாலிதீன் பையில் போட்டு வழங்கினர். பாலிதீன் பையின் மீது ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் இரண்டு விரலைக் காட்டும் படம், ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. மேலும், 'மீண்டும் நல்லாட்சி அமைந்திட வாக்களிப்பீர் இரட்டை இலைக்கே' என்றும், அதன் அருகில் இரட்டை இலை சின்னமும் அச்சிடப்பட்டு இருந்தது.

 

நள்ளிரவு நேரத்தில் கட்சியினர் சென்றதால் பலர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். திறக்கப்படாத வீடுகளில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் சேலையை வீசிவிட்டுச் சென்றனர். வீட்டு திண்ணைகளிலும் சேலையை வைத்துவிட்டுச் சென்றனர்.

 

பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மற்ற அரசியல் கட்சியினர் கூறுகையில், ''தேர்தல் நடத்தை விதிகளைப் பற்றி அதிமுகவினருக்கு எந்த கவலையும் இல்லை. தேர்தல் அறிவித்த முதல் நாளிலேயே சேலையை விநியோகிக்க தொடங்கி விட்டனர். அதற்கு அடுத்து வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்யவும் தயாராகிவிட்டனர். தேர்தல் அதிகாரிகள் எடப்பாடி தொகுதியை தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் நேர்மையாக நடக்கும்,'' என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.