Skip to main content

“வாக்கு எண்ணும் மையத்தின் தகரச் சீட்டுகளை உடைத்தெறிவோம்”- மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

AIADMK candidate sued for threatening to break tin slips

 

ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இதில்  இரண்டாவது கட்ட தேர்தல் வாக்களிப்பு கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விசாரித்ததில், இந்த ஒன்றியத்திலுள்ள பேரங்கியூர், ஆனத்தூர், கருவேப்பிலைபாளையம், பெரியசெவலை, ஆம்பூர், கொளத்தூர், சித்தலிங்கமடம், எடப்பாளையம் உட்பட 50 ஊராட்சிகளுக்கும் அதில் அடங்கிய கிராமப்புற வார்டுகளுக்கும் ஒன்றிய, மாவட்ட குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது.

 

இது சம்பந்தமான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பாதுகாப்பில் இருந்து வருகின்றது. நாளை 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்பாளர்களின் ஏஜெண்டுகளை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அதிமுக சார்பில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளராக வழக்கறிஞர் உதயகுமார் மற்றும் அக்கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான அளவில் முகவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார், ஒரு அறைக்கு இரண்டு பேர் வீதம் ஆறு பேர் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரையும் சேர்த்து ஏழு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அதிகப்படியான முகவர்களை அனுப்பவேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக வேட்பாளர், ‘வாக்கு எண்ணும் மையத்தின் மீது தடுப்புக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள தகரச் சீட்டுகளை நாங்கள் உடைத்தெறிவோம்’ என அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர். இவர்கள் மிரட்டல் குறித்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று அதிமுக வேட்பாளர் உதயகுமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் அரசுப் பணியைச் செய்யவிடாமல் அதன் ஊழியரைத் தடுத்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்கள் மத்தியில்  பெரும் அச்சத்தைப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.