நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று காலை தொடங்கிய நிலையில் இன்று மாலை 03.00 மணியளவில் நிறைவு. அதிமுக சார்பில் போட்டியிட சுமார் 120 பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர்.

Advertisment

aiadmk assembly byelection application form time end

விருப்ப மனு கொடுத்தவர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி முனுசாமி உட்பட சுமார் 9 பேர் கொண்ட அதிமுக கட்சியின் ஆட்சி மன்ற குழு நேர்காணலை நடத்துகிறது. இந்த நேர்காணலில் சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.