தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திருந்தது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதைக் கண்டித்தும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியற்றைக் கண்டித்தும் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

Advertisment