Skip to main content

ஆட்சியர் அலுவலகம் முன்பாக கடலைப் பருப்பைக் கொட்டி போராடிய விவசாயி..!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Agriculture Officer who spoke irresponsibly Farmer in pain

 

சின்னமனூர் வேளாண்மை மையத்தில் விலைக்கு வாங்கிய கடலைப் பருப்பு முளைக்கவில்லை என, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பாக கடலைப் பருப்பைக் கீழே கொட்டி விவசாயி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் பொட்டிபுரம் அருகே ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி காளிதாசன்.

 

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி சின்னமனூரில் உள்ள வேளாண்மை மையத்தில் 36 கிலோ கொண்ட 4 விதை கடலைப் பருப்பு மூடைகளை வாங்கி உள்ளார். மூடைகளைப் பக்குவமாக உடைத்ததில் 50 கிலோ விதை கடலைப் பருப்பு கிடைத்தது. அதில் சாகுபடி செய்ததில் 20 கிலோ கடலைப் பருப்பு மட்டுமே முளைத்துள்ளது. மீதி 30 கிலோ பருப்பு, பதரானதால் விவசாயம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தேனி மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக பதர் விதை கடலைப் பருப்பைத் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்.

 

Agriculture Officer who spoke irresponsibly Farmer in pain

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “நான் ஒரு விவசாயி, கடலை சாகுபடி செய்வதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி சின்னமனூர் வேளாண்மை மையத்தில் 144 கிலோ விதை கடலையை வாங்கி அதனைப் பக்குவமாக கையில் உடைத்தில் 50 கிலோ விதை கடலைப்பருப்பு கிடைத்தது. அதில் 20 கிலோ கடலைப்பருப்பு மட்டுமே முளைத்துள்ளது, மீதமுள்ள 30 கிலோ கடலைப்பருப்பு பதராக உள்ளது.

 

இது சம்பந்தமாக வேளாண்மை மையத்தில் கேட்டால், பதரான கடலைப் பருப்பை எண்ணெய் ஆட்டி எடுத்துக்கொள் என்று பொறுப்பில்லாமல் கூறுகின்றனர். இதனால் மன வேதனையுடன் தேனி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வந்தேன்.” என்றார். மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.