Skip to main content

விவசாயிகள் மீது தடியடி! காய்கறிகள் விலை உயரும் அபாயம்!

Published on 26/03/2020 | Edited on 01/04/2020
r

 

விளைந்த காய்கறிகளைச் சந்தைகளுக்குச் சென்று கொடுத்துவிட்டு திரும்பும் விவாயிகள் மீது போலீசார் தடியடி நடத்துவதால் தமிழக விவசாய சங்கங்கள் அதிரடி தீர்மானம் நிறை வேற்றியுள்ளன.இதனால், காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்,ஏர்முனை இளைஞர் அணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம், தமிழ் விவசாயிகள் சங்கம், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ஒன்றிணைந்து தமிழக அரசுக்கு கேள்விகள் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
 

அதில், ‘’தமிழக அரசே, காய்கறிகள் அத்தியாவசிய பொருட்களில் உள்ளதா, இல்லையா? நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் இருக்கும் தினசரி காய்கறி சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டுவரும் போது மட்டும் உழவர்களை அனுமதித்துவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லும்போது காவல்துறையினர் தடியடியைப் பரிசாகக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.
 

அதேபோல் தினசரி காய்கறி சந்தைக்குக் காய்கறிகளை வாங்க வரும் சிறு,குறு வியாபாரிகளையும், மளிகைகடைக்காரர் களையும் சந்தைக்கு வருவதற்கு தமிழக காவல்துறை அனுமதிக்கவே இல்லை.தமிழக உழவர்களைப் பொருத்தவரை கொரோனா (வைரஸ்) ஒழிப்பில் அரசுக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் எங்கள் உயிரோடு சம்பந்தப்பட்டதும் கூட.  
 

தேவையே இல்லாமல் ஊர் சுற்றுபவர்களைத் தண்டிக்கும் பாணியில் உழவர்களையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதா? இந்தப் பிரச்சினை நேரடியாகக் காய்கறிகள் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். மக்களையும் பாதிக்கும், தினசரி காய்கறி சந்தையால் கொரோனா பரவும் அபாயம் இருந்தால் மற்ற நிறுவனங்களைப் போலவே தினசரி காய்கறி சந்தையை மூடிவிடுங்கள்.  தமிழக உழவர்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
 

காய்கறிகள், கீரைகளை விற்கும் பல்பொருள் விற்பனை நிலையங்கள், மளிகை கடைகளுக்கு அனுமதி, காய்கறிகளை தினசரி சந்தைக்கு விற்பனை செய்ய கொண்டுவரும் உழவர்களுக்கு மட்டும் அடியா? மேற்கண்ட பிரச்சினை குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை உழவர்கள் தமிழக அரசிடமே விட்டுவிடுவதாகத் தீர்மானித்துள்ளோம். 
 

இந்தக்கோரிக்கை செய்தியை தமிழக அரசுக்குகொண்டு செல்லும் வகையில் அனைத்து குழுக்களிலும், ஊடகங்களிலும் பகிருமாறு விருப்பம் உள்ளவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்” - முதல்வர். மு.க. ஸ்டாலின்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Modern technical knowledge should be used in agriculture Chief Ministeர் mk stalin

 

திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இன்று முதல் ஜூலை 29 வரை மூன்று நாட்கள் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ‘வேளாண் சங்கமம் - 2023’ வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “ திமுக அரசு  பொறுப்பேற்றுச் செயல்படுத்திய திட்டங்களினால், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021 - 22 ஆம் ஆண்டு 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டு சாதனையைப் படைத்திருக்கிறோம். குறுவை சாகுபடியை மேற்கொள்வதற்காகக் கடந்த 2022 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையை உரிய தேதிக்கு முன்னரே திறந்த காரணத்தினால், டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை எட்டியிருக்கிறோம். உழவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் திமுக அரசு, நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி, உழவர்கள் அதிக பாசனப் பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது. அந்தச் சாதனைப் பயணத்தின் தொடர்ச்சியாகத்தான், மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது இதுவரை 5 ஆயிரத்து 201 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 ஆயிரத்து 504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர்களுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 விழுக்காடு கூடுதல் மானியத்தை அரசு வழங்கி வருகிறது. இதற்கென 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதலாக சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாயும், இதர இரகங்களுக்கு 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில்  நெல் கொள்முதலில் ஊக்கத்தொகையாக மட்டுமே 376 கோடியே 63 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அறிவித்த ஆதார விலையான டன் ஒன்றுக்கு 2821 ரூபாய்க்கு மேல் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கி வருகிறது. உழவர்களிடையே காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம். பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்த ஏதுவாக நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது.

 

Modern technical knowledge should be used in agriculture Chief Ministeர் mk stalin

 

இயந்திரங்கள், தொழிற்சாலைகள், துணி நூல்கள் ஆகியவற்றுக்காகக் கண்காட்சிகள் நடத்துவதைப் போல வேளாண்மைக்குக் கண்காட்சி நடத்துவதும் மிக மிக அவசியமானது. வேளாண்மைத் துறையானது அதிகமான அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதன் அடையாளமாகவும் இதுபோன்ற கண்காட்சிகள் மூலமாக நாம் சொல்லலாம். நவீனத் தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண்மை இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் தொழில் நுட்பங்கள் என ஏராளமாக வந்து கொண்டே இருக்கின்றன. இதுபற்றிய அடிப்படைத் தகவல்களை உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கும் அறிமுகம் செய்தாக வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன. உழவர்களது உற்பத்தி அதிகமாக வேண்டுமானால் அவர்களது உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமானால் வேளாண்மையில் நவீனத் தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்.

 

நேற்று நான் திருச்சிக்கு வந்தபோது, செய்தித்தாளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதில் இந்த ஆண்டு குறுவை சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான இறுதி நாளை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்துத் தரவேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இது பற்றி வேளாண்மைத் துறையினுடைய அதிகாரிகளையும், அமைச்சரையும் அழைத்துப் பேசினேன். நான் அவர்களோடு கலந்து பேசி அதை உடனடியாக இந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு 75 கோடி ரூபாய் மதிப்பிலான குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தைப் பெறுவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவின் மூலமாக உழவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

“திமுக ஆட்சியில் மண்ணும், உழவர்களின் உள்ளமும் ஈரமானது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

The soil and the hearts of the farmers are wet under DMK rule  Chief Minister M.K.Stalin

 

திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், இன்று முதல் ஜூலை 29 வரை மூன்று நாட்கள் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ‘வேளாண் சங்கமம் - 2023’ வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்காட்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், “சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் கண்காட்சியைப் பார்வையிட்டுச் செல்லுகிற நேரத்தில் இன்றைக்குப் பெற்ற உணர்வை அன்றைக்கே பெற்றேன். பழங்கள், காய்கனிகள் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த உணர்வையும் பெரும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கக் கூடிய உழவர் நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றியைக் காணிக்கையாக்க விரும்புகிறேன். திமுக ஆட்சி அமைந்த பிறகு அனைத்துத் துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என உழைத்து வருவதை நன்கு அறிவீர். அதில் மிகச் சிறப்பான வளர்ச்சியை வேளாண்துறையும் பெற்றுள்ளது. மற்ற துறையைப் போல வேளாண்துறையை நினைத்தவுடனே வளர்த்து விட முடியாது. மற்ற துறையை வளர்க்க நிதிவளம் இருந்தால் போதும். ஆனால் வேளாண் துறையை வளர்க்க நிதித்துறை மட்டுமல்ல, நீர்வளமும் வேண்டும். தேவையான இடுபொருளும் உரிய காலத்தில் கிடைக்க வேண்டும்.

 

திமுக ஆட்சி அமைந்ததும் நீர்வளமும் கை கொடுத்தது. பருவ மழையும் முறையாகப் பெய்து உழவர்களுக்கு உதவியாக இருந்தது. வேளாண் பெருமக்களுக்குத் தேவையான இடுபொருட்களை வேளாண்துறை உரிய காலத்தில் தேவையான அளவு வழங்கியது. அதனால் உற்பத்தி பெருகியது. உற்பத்திப் பரப்பும் அதிகமானது. மண்ணும் ஈரமானது, உழவர்களின் உள்ளமும் ஈரமானது. மண்ணும் வளர்ந்தது. மக்களும் மகிழ்ந்தார்கள். அதனால்தான் இது போன்ற வேளாண் சங்கமத்தைப் பெருமையோடு நடத்த முடிகிறது. திமுக அரசு அமைந்தவுடன் வேளாண்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி இருக்கிறோம். வேளாண்மை செய்ய ஏதுவாக கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கிச் சாதனை படைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக  மேலும் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளன” எனப் பேசினார்.