Skip to main content

ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறி குழிக்குள் தவமிருந்த அகோரியால் பரபரப்பு!!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

Agori sokkanathan theni

 

ஆண்டிபட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறி குழிக்குள் தவமிருந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது. 


தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மூன்றாவது மகன் அசோக் என்ற சொக்கநாதர், தனது 13 வயதில் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சொக்கநாதர், உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்குச் சென்றுள்ளார். அங்கு சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று, அவர் அகோரியாக மாறியதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊரான மொட்டனூத்துக்கு வந்தார். அப்போது தனது கிராமத்தில் உள்ள மக்களிடம், தன்னை சிவனின் அருள் பெற்றவர் என்றும் கூறினார். இது தவிர, தான் முக்தியடைந்து ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறிவந்தார்.
 

நேற்று முன்தினம் இரவு சிவனின் உத்தரவின்பேரில், அருகே உள்ள தோட்டத்தில் ஜீவசமாதி ஆகப்போகிறேன் என்றும் அதற்காகக் குழி தோண்டி அதில் இறங்கப் போவதாகவும் அங்குள்ள பக்தர்களிடம் சொக்கநாதர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்தனர். அதன்படி நேற்று காலை மொட்டனூத்துவில் உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி ஆழக் குழி வெட்டப்பட்டது. பின்னர் அந்தக் குழியில் சிமென்ட் சிலாப் கல் வைத்து, சமாதி போன்ற அமைக்கப்பட்டது. அந்தச் சமாதிக்குள் சிவன் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கிவைத்து சொக்கநாதர் அதற்குள் அமர்ந்து தவம் இருக்கத் தொடங்கினார். 
 

Agori sokkanathan theni

 

சமாதியின் மேல் பகுதியை சிமெண்ட் கலவை வைத்து மூடி விடும்படி பக்தர்களிடம் கூறி உள்ளே அமர்ந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ஜீவசமாதி அடையப்போவதாக குழிக்குள் இறங்கிய அகோரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது, அவர் கூறியதாவது, நான் பல ஆண்டுகளுக்கு முன்பே காசிக்கு சென்று சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரி முனிவராக மாறி, 25 ஆண்டுகளாகவே உணவு சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் அகோரியாக மாறி சாகாவரம் பெற்றுள்ளேன். நான் 24 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டேன். தற்போது பல பிறவிகள் எடுத்து மீண்டும் உயிருடன் இருக்கிறேன். கடவுளின் உத்தரவின்பேரில் இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புவந்து அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருப்பணி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். நேற்று முன்தினம் இரவு சிவன் எனக்கு ஒரு உத்தரவை வழங்கினார். 
 

அதன்படி நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள், பிணிக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வறட்சியும் நிலவுகிறது. மக்கள் நோயின்றி வாழவும் அவர்களைக் காப்பாற்றவும் வேண்டும். அதற்காக ஒன்பது நாட்கள் இந்தக் குழிக்குள் தவமிருக்கப்போகிறேன் என்று கூறினார். மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள் உயிருடன் வெளியே வருவேன் என்று கூறிவிட்டு அந்தக் குழியில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டார். இப்படி அகோரி ஒருவர் ஜீவசமாதி ஆகப் போகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் வேகமாகப் பரவியது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக மொட்டனூத்து பகுதிக்கு குவிந்தவண்ணம் இருந்தனர்.   

 

cnc


அகோரியிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழிக்குள்  பூமி பூஜை செய்யக்கூடாது என்றும் அதற்கு அரசு அனுமதி இல்லை என்றும் கூறி வெளியே வரும்படி கூறினர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குழிக்குள் இருந்த அகோரி சொக்கநாதர் வெளியே வந்து, அவர் ஜீவசமாதி ஆவதற்குரிய இடத்திற்கு அருகிலேயே சிவன் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப் போவதாகக் கூறி அங்கு அமர்ந்து கொண்டார்.

 

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பொது மக்களின் வருகை அங்கு அதிகமாக இருப்பதாலும் மீண்டும் அந்த அகோரி இறங்கவிடாமல் தடுப்பதற்காகவும் மொட்டனூத்து கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.