Skip to main content

கரோனா காலத்தில் இணையவழியில் படிக்க ஏழை மாணவர்களுக்கு 500 செல்ஃபோன்கள் வழங்கிய 'அகரம்' 

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

'Agaram' provided 500 cell phones to poor students to study online during Corona

 

கடந்த 10 வருடங்களாக, தமிழகத்தில் ஏழை மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, ஏழைகளின் வீடுகளில் கல்வி விளக்கு ஏற்றி வைத்திருக்கிறது நடிகர் சூர்யாவின் 'அகரம்' ஃபவுண்டேஷன்.

 

கரோனா காலத்தில் கூட விண்ணப்பித்த மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழக்கம் போல ஆய்வுகள் செய்து, கல்லூரிகளில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், கரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் ஆண்ட்ராய்டு ஃபோன் இல்லாமல், இணைய வகுப்புகளில் பங்குபெற முடியாமல் தவித்துவருகின்றனர்.

 

இதனையறிந்த, 'அகரம்' அறக்கட்டளையினர், ஏழை மாணவ, மணவிகள் சுமார் 500 பேருக்கு ஆண்ட்ராய்டு ஃபோன் வழங்கத் திட்டமிட்டனர். இந்தத் திட்டம் பற்றி அறிந்த அமெரிக்க வாழ் தமிழரான கல்யாணராமன், செல்ஃபோன்கள் வழங்க முன்வந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்ஃபோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னார்வலர்கள் முன்னிலையில், மாணவ, மாணவிகளுக்கு செல்ஃபோன்கள் வழங்கப்பட்டது. செல் ஃபோன்களுடன் அறிவுரைகள் அடங்கிய துண்டறிக்கையும் வழங்கப்பட்டது. அதில், இந்த செல்ஃபோனை, தகவல்களை அறிந்துகொள்ளுதல், பாடங்களைக் கற்றுக்கொள்ளுதல் போன்ற பயனுள்ளவற்றுக்காக மட்டும் பயன்படுத்துங்கள். ஆனால் விளையாட்டு, தேவையில்லாத பொழுதுபோக்குகள், நாள்முழுவதும் செல் ஃபோன்களில் மூழ்கக் கூடாது என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

 

செல்ஃபோன்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களும் பயனுள்ள வகையில் மட்டுமே பயன்படுத்துவோம் என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடங்கள் கழித்து இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Suriya  Jyothika to act together in movie after 18 years

சூர்யா - ஜோதிகா, கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான இவர்கள், இதுவரை 'பூவெல்லாம் கேட்டுப்பார்', உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி என 6 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

2006ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா சில ஆண்டுகள் நடிப்பதிலிருந்து விலகியிருந்தார். பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். இப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே  பாண்டிராஜ் இயக்கத்தில் 2015ல் வெளியான பசங்க 2 படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. அப்போது 36 வயதினிலே படத்திற்காக கமிட்டாகியிருந்த நிலையில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் 18 வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா - ஜோதிகாவே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இருவரும் இணைந்து ஒர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஜோதிகா,  இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.