Advertisment

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் மூன்று பிரபலங்கள்!

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் வனிதா மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீது கடந்த சீசனை விட சர்ச்சைகள் அதிகமாக கிளம்பியுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றபடவில்லை.

Advertisment

big boss

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று பேர் விருந்தினர்களாக செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளனர். இவர்கள் மூவரும் ஒரு வாரத்திற்கு விருந்தினர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களிடம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் வர வேண்டும் என கமல் கேள்வி எழுப்பினார். அதில் பெரும்பாலும் அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா பெயரை கூறினர் என்பது குறிப்படத்தக்கது.

tv show contest kamalhaasan bigboss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe