Advertisment

மீண்டும் ஒரு பாலியல் பிரச்சனை- பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்

thiru

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்களம் புதூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி. அந்த சிறுமிக்கு கடந்த சில வாரங்களாக பாலியல் ரீதியாக உடலில் சீண்டியுள்ளார் அப்பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணி.

இது வேறு ஆசிரியர் ஒருவர் மூலம், அந்த குழந்தையின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் பள்ளிக்கே வந்து அந்த ஆசிரியரை அடித்துள்ளனர். இந்த தகவல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரன், நேரடியாக சென்று விசாரணை செய்து சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

திருவண்ணாமலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் வெளிநாட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பாகி அந்த பரபரப்பு இன்னும் அடங்கக்கூட இல்லை. அதற்குள் கல்வியை போதிக்க வேண்டியவர் கலவி புரிய துணிந்து சிறுப்பிள்ளையிடம் தன் இச்சையை காட்டியது பொதுமக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

thiruvannamalai Child rape
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe