Skip to main content

தாலி கட்டியதும் மாப்பிள்ளையை அடித்த மணப்பெண்... தாலியை தூக்கி வீசிவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு!

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

நாமக்கல்லில் திருமணத்தின் போது தாலி காட்டியதும் மாப்பிள்ளையை மணமகள் கன்னத்தில் அறைந்து விட்டு தாலியை தூக்கி எறிந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சார்ந்தவர் விஜி. இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கும், ராசிபுரம் பகுதியை சார்ந்த கனிகா (பெயர் மட்டற்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் திருமணம்  செய்து வைக்க இரு வீட்டிலும் முடிவு செய்துள்ளனர். இதற்கான நிச்சயமும் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. 

 

incident



இந்த நிலையில் அங்குள்ள சோமேஸ்வரர் கோயிலில் திருமண ஏற்பாடுகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலர் முன்னிலையில் நடந்துள்ளது. அப்போது முகூர்த்த நேரம் நெருங்கியதால் மாப்பிள்ளை மணமகளுக்கு தாலி கட்டினார். வந்திருந்தவர்கள் எல்லாம் மணமக்களுக்கு பூ தூவி அட்சதை போட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் மணமகன் விஜி, மணமகள் நெற்றியில் பொட்டு வைக்க பெரியவர்கள் கூறினார்கள். அப்போது மாப்பிள்ளை கணிக்க நெற்றியில் பொட்டு வைக்க சென்றார். திடீரென விஜியின் கையை கல்யாண பொண்ணு தட்டிவிட்டார். இதனால் எதுவும் புரியாமல் என்னசெய்வது என்று தெரியாமல் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் கனிகா. இதன் பிறகு அப்போது தான் கட்டி முடித்த தாலியை எடுத்து வீசியெறிந்தார். அங்கு கூடியிருந்தவர்கள், பெற்றோர்கள் என யாரை பற்றியும் கவலைப்படவில்லை.  இரு வீட்டாரும் மணப்பெண் நடவடிக்கையை பார்த்து கடுமையான அதிர்ச்சியில் உறைந்தனர். பின்பு கனிகா வேகவேகமாக கோயிலிலை விட்டு வெளியே சென்றுவிட்டார். 


இதைபார்த்த அர்ச்சகர், எல்லாரையும் வெளியேற சொல்லி விட்டு, கோயிலை பூட்டிவிட்டு புறப்பட்டு போய்விட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று இதை பற்றி புகார் அளித்துள்ளனர். அப்போதுதான் மாப்பிள்ளை வீட்டிற்கு விஷயம் தெரிந்துள்ளது. விசாரணையில் கல்யாண பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருந்துள்ளது. இந்த கல்யாணத்துலயும் இஷ்டம் இல்லை என்று தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு போலீசார் இரண்டு வீட்டையும் சமாதானம் படுத்தி விட்டு அனுப்பியுள்ளனர். பின்பு  வேற ஒரு உறவுக்கார  பெண்ணை பார்த்து விஜிக்கு கல்யாணம் முடித்து வைத்தனர். இந்த சம்பவத்தால் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; மனைவியின் வினோத கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Disappointing results deny the wife's strange request on extramarital affair in UP

உத்தரப் பிரதேசம் மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலித்தொழிலாளியான ராம் கோவிந்தின் மனைவி கவிதா (34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான 7 ஆண்டுகள் ஆன இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கவிதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், கவிதாவின் கணவர் ராம் கோவிந்துக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதில் மனமுடைந்த கவிதா, நேற்று முன் தினம் (03-04-24) தனது வீட்டு முன் உள்ள உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கவிதாவை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதற்கு கவிதா மறுப்பு தெரிவித்து கம்பத்தில் ஏறியவாறு இருந்ததால், உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயரழுத்த டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இதனை, அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனையடுத்து, கீழே வந்த கவிதாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கவிதா தனது ஆண் நண்பரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்குமாறு தனது கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வினோத கோரிக்கைக்கு ராம் கோவிந்த் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அந்த பெண், டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரபல நடிகரை மணக்கும் அபர்ணா தாஸ்?

Published on 03/04/2024 | Edited on 05/04/2024
aparna das get to married deepak parambol

2019 ஆண்டு மலையாளத்தில் வெளியான மனோகரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அபர்ணா தாஸ். கேரளாவை சேர்ந்த அவர் அடுத்த படமாகவே தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமாக உருமாறினார். பின்பு தமிழில் கவினுக்கு ஜோடியாக நடித்த டாடா படம் அடுத்தகட்டத்திற்கு அவரை அழைத்து சென்றது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான நடிகையாக மாற்றியது. 

இதனிடையே தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். கடந்த ஆண்டு ஆதிகேஷவா படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இப்படி மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்து வரும் அபர்ணா தாஸ் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் தீபக் பறம்போலை நீண்ட நாள் காதலித்து வந்ததாகவும் ஏப்ரல் 24ஆம் தேதி அவரை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணம் கேரளாவின் வடக்காஞ்சேரியில் நடக்கவுள்ளதாகவும் இது தொடர்பான பத்திரிக்கை ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

aparna das get to married deepak parambol

மலையாள படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த தீபக் பறம்போல், விஸ்வ விக்யாதரய பையன்மார் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து லவ் ஆக்‌ஷன் ட்ராமா, ஹெவன், கன்னூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியாகி மலையாளத் திரையுலகில் பெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஒருவராக நடித்திருந்தார். இருவரும் மனோகரம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இருவருக்கும் திருமண நடக்கவுள்ளதாக சொல்லப்படும் தகவல் வைரலாக பேசப்படும் நிலையில், இருவர் தரப்பிலிருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் தீபக் பறம்போல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஜோடியாக வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவிலும் ஏப்ரல் 24 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.