Skip to main content

காசுக்கு விலை போகாத மானத்தமிழ் உறவுகளுக்கு நன்றி.. வீடு வீடாக சென்று நன்றி சொல்லும் நாம் தமிழர் கட்சியினர்.

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

நடந்து முடிந்த 17- வது மக்களவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். தமிழ்நாட்டில் தி.மு.க- காங்கிரஸ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைமைகளும் தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்து வருகின்றனர்.  மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து  நாம் தமிழர் கட்சியினரும்  வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்வதுடன் நன்றி நோட்டீசும் வழங்கி வருகின்றனர். அந்த நோட்டீசில்.. தொலைக்காட்சி பிரச்சாரங்கள் ஏதுமின்றி சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு 72 ஆயிரத்தில் 240 வாக்குகளையும், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் 10 ஆயிரத்தில் 250 வாக்குகளும், ஒரு காசு வாங்காமல் வாக்களித்த வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

 

naam tamilar party

 

 

அதிலும் வடகாடு கிராமத்தில் மட்டும் சுமார் 800 வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. பணம் வாங்காமல் ஜனநாயக கடமையை செய்த வாக்காளர்களை தலைவணங்கி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம். இனி வரும் தேர்தல்களிலும் இதே போல அனைத்து வாக்காளர்களும் பணம் வாங்காமல் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது எங்கள் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். காசுக்கு விலை போகாத மானத் தமிழ் உறவுகளுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறோம் என்றனர் நோட்டீஸ் கொடுத்த நாம் தமிழர் கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.