Skip to main content

6 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையுடன் இணையும் யானை பாகன் ஸ்ரீதர்!

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் 108 வைணவ தலங்களில் முதன்மை தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாள், திருக்கோவில் திருப்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றது. தமிழக அரசு யானைக்கு மேலும் ஒரு பாகனை நியமித்து உத்தரவிட்டதில் யானைப் பாகன் ஸ்ரீதர் விலகினார் பின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நடைபெற்றது அதில் யானைப்பாகன் ஸ்ரீதரை பணி நியமனம் செய்ய கூறப்பட்டு உள்ளது. 

 

After 6 years,  Sridhar joins with Srirangam Andal elephant

 

ஆண்டாள் யானையானது திருச்சியைச் சேர்ந்த பக்தர் அண்ணாமலை என்பவரால் 16-10-86 அன்று கோவையிலிருந்து 8 வயது குட்டியாக வாங்கிவந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு 33 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக தரப்பட்டது. ஆண்டாள் ஸ்ரீரங்கம் வந்ததிலிருந்து கோவில் யானை பாகனாக இருந்து ஸ்ரீதர் பராமரித்து வந்தார்

 

ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருக்க வேண்டும் என்று இந்து அறநிலைத்துறை உத்தர விட்டது. அதனை தொடர்ந்து ராஜேஷ் என்பவரை உதவிப் பாகனாக நியமனம் செய்தனர்.

 

2 பாகன்களை நியமிப்பதால் யானை யாருடைய சொல்லைக் கேட்பது என்பதில் குழப்பம் ஏற்படும். அதனால் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும் என்றனர். அதன்பின்னர் ஆண்டாளும் ஸ்ரீதரும் பிரிந்தார்கள். இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஆண்டாளை ஸ்ரீதர் 3-1-2013-க்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (9- 4-19) சந்திக்கிறார்.

 

எப்போதும் ஆண்டாள் யானையுடன் யானை பாகன் ஸ்ரீதர், ஸ்ரீரங்கம் வீதிகளில் வலம் வரும்போது பக்தர்களும் அந்த பகுதி மக்களும் பக்தி பரவசத்துடன் வணங்கி ஆசீர்வாதம் வாங்குவார்கள். சின்னத்திரையில் மிகப்பிரலமான சித்தி தொடரில் ஆரம்ப காட்சிகளில் ஸ்ரீதர் ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானையுடன் ஸ்ரீரங்கம் வீதிகளில் நடந்து வருவதை சென்டிமென்ட் காட்சியாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தது குறிப்பிடதக்கது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் அடிகளார்கள் போராட்டம்!

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
struggle at Trichy Srirangam

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி திருக்கோவில் ஆரியப்படாள் வாசல்  அருகே  கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இச்சிலை கடந்த 2015 ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட பெருமாள் அடியார் குழாமினர், அதன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் பெருமாள் பண்ணிசைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.