Skip to main content

“58 வருடம் கழித்து முதலில் அவரை நான் தான் கைது செய்தேன்” - பொன்.மாணிக்கவேல் பேட்டி

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

"After 58 years I was the first to arrest Deenadayalan" - Pon. Manikavel interview

 

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “2017 ஆம் ஆண்டு நான் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும். அப்பொழுது முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் போட்டேன். துப்பாக்கி முனையில் காவல்துறையினர் சிலையைக் கொள்ளையடித்த வழக்கு. அந்த வழக்கில் 47 பக்கத்திற்கு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஒருத்தர் கொடுக்கிறார். அவர்தான் டி.எஸ்.பி. அசோக் நடராஜன். என்னைப் பொறுத்தவரை என்னிடம் வேலை பார்க்கும் வரை அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்த அதிகாரிகளில் அவரும் ஒருவர். மிகவும் முக்கியமானவர்.

 

அசோக் நடராஜன் 47 பக்கத்திற்கு என்ன பதிவு போட்டாரோ, அந்த முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஈயடிச்சாங் காப்பி என்று சொல்வார்களே, அதுமாதிரி அதில் என்ன இருக்கிறதோ அதைப் போட்டுள்ளார்கள். அப்படி பார்க்கும்பொழுது, குற்றவாளி பட்டியலில் அவரது பெயரோ, என்னுடைய பெயரோ கடவுள் சத்தியமாக இல்லை. வந்த செய்திகள் தவறானது. சொல்லப்போனால் பொய்யானது. 100 விழுக்காடு அல்ல ஒரு லட்சம் மடங்கு பொய்யானவை.

 

தீனதயாளன் யாரு? 1958... நீங்க எல்லாம் அப்பொழுது பிறந்திருக்க மாட்டீர்கள். அப்பொழுது அபர்ணா ஆர்ட் கேலரியை தீனதயாளன் ஆரம்பிக்கிறார். அதன்பிறகு பேட்ச் பேட்ச்சாக பாம்பே போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிக்கிட்டே இருக்கிறார். 1958-ல் இருந்து 58 வருஷத்தை கூட்டுங்க. 58 வருஷம் கழித்து சி.பி.ஐ.யோ, சி.பி.சி.ஐ.டி.யோ என யாரும் கைது பண்ணல. தீனதயாளனை நான்தான் முதன் முதலில் கைது செய்தேன். நீங்க போய் அவனை விட்டுட்டீங்கனு சொன்னா, அது நியாயமா?

 

1983-ல் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் எத்தனை அதிகாரிகள் இருந்திருப்பார்கள். அவர்களெல்லாம் எங்க போனார்கள். இவ்ளோ பேர் இருந்தாலும் 58 வருடம் கழித்து 783 சிலைகளோடு தீனதயாளனை பிடித்தேன். 731 தெய்வ விக்கிரகங்களை வீட்டில் இருந்து எடுக்கிறேன். அவருடைய ட்ரேடையே நிர்மூலமாக்கினேன். 2016-ல் அவரைப் புடிக்கிறேன். அப்போ எல்லாம் ஹைகோர்ட் எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை.

 

தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு டி.ஐ.ஜி., ஏழே ஏழு போலீசார். மாநிலம் முழுக்க கண்காணித்தேன். அக்கியூஸ்டு வீட்டிலேயே 30 நாட்கள் உட்காந்திருப்பேன் நான். அவர் 90 நாட்கள் உள்ளே இருப்பார். நான் வெளியே வந்து இரண்டே முக்கால் வருடங்கள் ஆகிறது. என் மாதிரியே அந்த துறையில் அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்த இரண்டே முக்கால் வருடத்தில் இந்த வழக்கில் என்ன செய்தார்கள். இரண்டே முக்கால் வருடமாக குற்றப்பத்திரிகை போடாமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எதுக்கு சம்பளம் வாங்குறீங்க மக்கள் வரிப்பணத்தில் என்று கேட்கலாமா, கேட்கக் கூடாதா?

 

அசோக் நடராஜன் இன்வெஸ்டிகேசன்ல வாக்குமூலம் வாங்கியவர். அவருக்கு ஆக்சிலரேட் ப்ரோமோஷன்  கொடுத்திருக்க வேண்டும். யாரோ ஒருவர் காட்டில் கிரிமினலாக இருந்தார் (மறைமுகமாக வீரப்பனை குறிப்பிட்டு). அவரைப் பிடிச்சி சுட்டுப்போட்டாங்க. அதுக்கு 700 பேருக்கு ஆக்சிலரேட் ப்ரோமோஷன் கொடுத்தாங்க இன்க்ளூட்டிங் தோச சுட்டவரு, சப்பாத்தி சுட்டவருக்கெல்லாம் ஆக்சிலரேட் ப்ரோமோஷன் கொடுத்தாங்க.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.