Skip to main content

குட்டி எதிரியை கண்டு ஏன் எடப்பாடி பயப்படுகிறார்! இடைத்தேர்தலில்  இரண்டு தொகுதிகளையும்  கைபற்றுவோம்! டிடிவி பகீர் பேச்சு!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
d

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா முன்னேற்ற கழகம் கிழக்கு மேற்கு என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது.  இதில் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி  ஏற்பாட்டில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக் கூட்டத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி கலந்து கொண்டார்.
      

      இக் கூட்டத்துக்கு மாவட்ட அளவில் உள்ள கட்சி பொருப்பாளர்களும், தொண்டர்களும் பெரும் திரளாகவே கலந்து கொண்டனர். அதை கண்டு டிடிவி பூரித்து போய் விட்டார்.  அந்த அளவுக்கு முன்ளால் முதல்வர்களான  ஜெ., கலைஞர் வந்தால் எந்த  அளவுக்கு கூட்டம் வருமோ அது போல் கூட்டம் அலைமோதியதை கண்டு  ஒட்டன்சத்திரமே ஸ்தம்பித்து விட்டது.


           அப்படி  ஒரு மாநாடு  போல் இருந்த கூட்டத்தில் பேசிய  டிடிவியோ....மதுரையை தவிர அதற்கு பிறகு நடந்த  எந்த கூட்டத்திற்கும் இந்த பழனிச்சாமி அனுமதி கொடுப்பதில்லை.  எல்லா கூட்டங்களும் கோர்ட்டில்  அனுமதி வாங்கி தான் நடத்தி வருகிறோம்.  அது போல் தான் இந்த  கூட்டத்திற்கும் கோர்ட்டில் அனுமதி வாங்கி தான் நடத்தி வருகிறோம்.  ஆனால்  எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கிறார்கள்.  அப்படி இருக்கும் போது  எங்களுக்கு மட்டும் கொடுக்காது  ஏன் பயமா? இதில அண்ணன் பழனிச்சாமி வேற என்னை  குட்டி எதிரி  என்கிறார்.  ஆம் அம்மாவின் குட்டி எலியாக தான் இருக்கிறேன்.  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்பாங்க. ஆனால் நான் 16ஆயிரம் அடி பாய்வேன். இந்த  குட்டி எலிக்காக தான் பழனிச்சாமி உள்பட மூன்று அமைச்சர்களும் ஆர்.கே.நகர் வீதியில் அலைந்தார்கள்.

 

d

 

கொங்கு மண்டலத்தில் இருந்து  இதுவரை ஒரு முதல்வர்  கூட வரவில்லை என்பதற்காகதான்  இந்த  பழனிச்சாமியை சின்னம்மா முதல்வராக ஆக்கினார். ஸ்டாலின்  பழனிச்சாமி வீட்டுக்கு  போய் இருக்க கூடாது கோர்ட்டுக்கு தான் போய் இருக்க வேண்டும். திமுகவுடன் எடப்பாடி கூட்டணி வைத்து இருக்கிறார் .  அந்த அளவுக்கு திமுக  எம்.எல்.ஏ.களும், திமுக  நபர்களுக்கும்  தான்  காட்ராக்ட் கொடுத்து இருக்கிறார் .  அந்த ரிக்காடுகளை நான்கு மாதங்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் எடுத்து தலைமை செயலாளரிடம் கொடுத்து இருக்கிறார்கள்.   திகார் ஜெயிலுக்கு போனேன் என்கிறார்கள்.  எதுக்கு போனேன் உங்களுக்கு இரட்டை இலை சின்னம்  கிடைக்க தான்  போனேன். இப்ப ஊழல் ஆட்சி   தான் நடக்கிறதே தவிர அம்மா ஆட்சி நடக்க வில்லை  அதுனால தான் அம்மா ஆட்சியை உருவாக்குவோம். 

 

ஆர்.கே.நகரில் டோக்கனை தூக்கி  காட்டுகிறார்கள் என்கிறார்கள்.  அது வேறு யாரும் இல்லை மதுசூதனன் தனது கைத்தடிகளை தூண்டி விட்டு 20நோட்டை தூக்கி காண்பிக்க  சொல்லி வருகிறார்.


        திருவாரூர்,  திருப்பரங்குன்றத்தில் அம்மா முன்னேற்ற கழகம் மாபெறும் வெற்றி பெறும். அதற்கு கூட டிடிவி வானத்தில் இருந்து பணத்தை கொட்டினார் என்று சொல்வார்கள். வருகிற 31ம்தேதி தீர்ப்பு. நல்ல தீர்ப்பாக கிடைக்கும்.  இந்த  நிதி மன்றம் தடை உத்திரவு இருக்கும் வரை இந்த  ஆட்சியும் இருக்கு  தற்பொழுது மணல் கொள்ளை மூலம் தான் ஆட்சி நடக்கிறது.  அதுனால  எப்ப தேர்தல் வந்தாலும் அது பாராளுமன்றமானாலும்.சட்டமன்றமானாலும்  குக்கர் சின்னம் மூலம் அமோகமாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

 

இக் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் உள்பட பதிவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.