Skip to main content

10 கோடி வரி பாக்கியை மூன்று தவணைகளில் செலுத்த அடையார் கேட் ஓட்டலுக்கு உத்தரவு

Published on 26/03/2018 | Edited on 26/03/2018
adyar

 

வரி பாக்கியில் 10 கோடியை மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும் என்று அடையார் கேட் ஒட்டலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும்  அடையார் கேட்  ஐந்து நட்சத்திர ஓட்டல்  ரூ 24 கோடி சொத்து வரி செலுத்தவில்லை என்று  மாநகராட்சி சார்பில்  நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 

அடையார் கேட்  சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.  24 கோடியில் முதல்  கட்டமாக   10 கோடி ரூபாயை எப்போது செலுத்த முடியும் என்று பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 


இந்த வழக்கு மீண்டும் நீதிபதி துரைசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓட்டல் சார்பில் ஆஐரான வழக்கறிஞர்,  இன்னும் இரண்டு நாட்களில் 2 கோடி செலுத்தி விடுவதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் ஒரு கோடி செலுத்துவதாகவும், மீதி 6 கோடியை செலுத்த இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார். 


இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர்,  தவணை முறையில் செலுத்த அனுமதி கொடுத்தால் அது ஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்றார். இதற்கு நீதிபதி 8  ஆண்டுகளாக எந்த பணமும் கிடைக்காமல் இருந்ததற்கு பதிலாக இப்போது 10 கோடி பணம் வருகிறதே என்றார். 


இதனைத் தொடர்ந்து நீதிபதி 10 கோடியில் மூன்று கோடி ரூபாயை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும்,  மீதி ஏழு கோடி ரூபாயில் 3.5 கோடியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்ளும், அடுத்த 3.5 கோடி ரூபாயை மே 30 ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான டிக்கெட்டுக்கு இ.எம்.ஐ வசதி - அசத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஸ்பைஸ்ஜெட்!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

spicejet

 

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணிகள் தங்கள் விமான டிக்கெட் கட்டணத்தை மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை 3, 6, அல்லது 12 தவணைகளில் செலுத்தலாம்.

 

இதில் மூன்று தவணைகளாக கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் ( வட்டி) கிடையாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் சேர பயணிகள், தங்களது பான் எண்ணையும், ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியை சமர்ப்பிக்க வேண்டும்.

 

அதேபோல் டிக்கெட் தொகையின் முதல் தவணையை யுபிஐ ஐடி மூலம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தவணைகள் அதே யுபிஐ ஐடியிலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

S A Ponnusamy



கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கரோனா நோய்த் தொற்றினால் கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்துத் தொழில் நிறுவனங்களும், அரசு, தனியார் அலுவலகங்களும் முற்றிலுமாக மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போனது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் பொதுமக்களிடமிருந்து வாகன கடன், வீட்டுக்கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாத தவணைத் தொகையை முதலில் மே-31 வரையிலும், அதன் பிறகு ஆகஸ்ட்- 31 வரையிலும் என மொத்தம் ஆறு மாதங்களுக்கு வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநரும், மத்திய நிதியமைச்சரும் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவை மதிக்காமல் குற்றுயுரும், குலையுருமாக இருக்கும் மக்களின் கழுத்தை அறுக்கும் செயலைத் தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் செய்து வருகின்றன.

 

 

 

rupees


கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து, வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரின் உத்தரவையும் மீறி தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் மாத தவணைகளை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், தன்னிச்சையாகச் செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் மிச்சம் மீதி இருக்கும் சொற்ப தொகையை அபராதம் என்கிற பெயரில் சுரண்டுவதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் கரோனா பேரிடர் காலமான தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லாத சூழலில் அவர்களை மாதத் தவணையைக் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராகச் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறு கட்டாயப்படுத்தும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
 

http://onelink.to/nknapp


கந்து வட்டிக்காரர்கள் போல மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழியும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சரும் அறிவித்த அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தைகளாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.