Skip to main content

கடத்தல்காரர்களை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் மறியல்! 

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Advocates demand to take action on mysterious persons

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள முட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ கணபதி(32). இவர், திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி சில மர்ம நபர்கள் வழக்கறிஞர் ராஜகணபதியை தொடர்பு கொண்டனர். அதில் பேசிய ஒருவர், மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் தனது சகோதரரை பிடித்து வைத்துள்ளனர். அவரை மீட்க வேண்டும். தாங்கள் அதற்கு வந்து உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  

 

வழக்கறிஞர் உடனடியாக தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் சென்ற வழக்கறிஞர் தனது வாகனத்தை விட்டுவிட்டு, அந்த போனில் அழைத்த மர்ம நபர்களுடன் ஒரு காரில் ஏறிச் சென்றுள்ளார். காரில் செல்லும் போது காருக்குள் மேலும் மூன்று நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் வழக்கறிஞர் ராஜகணபதியிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி வம்பு செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கறிஞருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

 

காரில் செல்லும்போது ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் காரை நிறுத்தி மேலும் ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டனர். தன்னை தவறான நோக்கத்தில் கடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ராஜகணபதி, ஓங்கூர் சுங்கச்சாவடியை கடக்கும்போது கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பித்துள்ளார். பிறகு சுங்க சாவடி ஊழியர்களிடம் தான் கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

 

அதன் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கறிஞர் ராஜா கணபதி கடத்தப்பட்டது குறித்து ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி வழக்கறிஞர் காரில் கடத்தப்பட்ட நிலையில் இதுவரை போலீசார் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்யப்படவில்லை. இதையடுத்து திண்டிவனம் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று திண்டிவனம் நீதிமன்றம் அருகில் செல்லும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு வழக்கறிஞர்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.