Skip to main content

எம்.பி மீது புகார் கொடுத்த வக்கீல்கள்...!!

Published on 01/03/2020 | Edited on 01/03/2020

நாடு முழுக்க தொடர்ந்து பற்றி எரியும் விவகாரமாக உள்ளது குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான நடக்கும் போராட்டங்கள். இந்த நிலையில் தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. சில பகுதிகளில் தொடர் போராட்டமாகவும் இது நடந்து வருகிறது.

 

 Advocates complain on MP ... !!

 

அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. திருப்பூரிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அங்குள்ள சிறுபான்மையினர் அவர்களது தனிப்பட்ட இடத்தில் தொடர்ந்து 20 நாட்களாக குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள். இந்த தொடர் போராட்டத்திற்கு திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதன் நிர்வாகிகள் ஒவ்வொரு நாளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அப்படித்தான்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்பி கே சுப்பராயன் போராட்டக் களத்திற்கு சென்று குடியுரிமை திருத்த சட்ட மசோதா மக்கள் மத்தியில் எவ்வளவு பிளவை உண்டாக்கிறது என பேசி இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என கூறி வந்தார்.

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள இந்து வழக்கறிஞர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பு அதில் உள்ள ஏழு பேர் திருப்பூர் மாநகர காவல்துறை கமிஷனரிடம் கம்யூனிஸ்டு எம்பி சுப்பராயன் போராட்டத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆகவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்கள்.

கம்யூனிஸ்டு எம்பி மீது இந்து முன்னணி அமைப்பு கொடுத்துள்ள புகார் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திரும்பி போ... திரும்பி போ...'- இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 'Go back... Go back...'- Youth Congress struggle

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் குமரன் சிலை அருகில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'திரும்பி போ... திரும்பி போ... மோடியே திரும்பி போ...' என  கோஷங்களை எழுப்பி வருவதால் அந்த பகுதியில் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மோடி வருகைக்கு எதிராக விவசாயிகள் கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Farmers black flag against Modi visit; Police build up

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார், இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி பிற்பகல் 2.06 மணிக்கு சூலூருக்கு வர இருக்கிறார். அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார். அதனைத் தொடர்ந்து பல்லடத்தில் 2.45 மணிக்கு மாதப்பூரில் நடைபெறும் பாஜக யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை  5.15 மணிக்கு சிறு குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மாலை 6:45 மணிக்கு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 8.40க்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்படுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அவினாசி பாளையத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே ஈரோடு சென்னிமலை பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கோஷங்களை எழுப்பியதால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் பகுதியில் அழகுமலை பிரிவு என்ற இடத்தில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் கருப்புக் கொடிகளை ஏந்தியும், கருப்பு பலூன்களை காட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2014 மற்றும் 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதனை நிறைவேற்றவில்லை என எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.