Skip to main content

'இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை' - வழக்கறிஞர் ராஜு பேச்சு!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் உழவர் சந்தையில் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக நடைபெற்ற அஞ்சாதே போராடு என்கிற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேசும்போது, "ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  ஊருக்கும் ஜனநாயகம் மாறுகிறது. ஸ்டெர்லைட் எதிர்த்து உயிர் கொடுத்து போராடினார்கள். போராடியவர்களை தேசத்துரோகிகள் என்று குரல் கொடுக்கிறார்கள் பாஜகவும் இந்து முன்னணியும்.

 

Advocate Raju  about caa

 



சங்பரிவாரம் அகண்ட பாரதம் விரும்புகிறது. ஒற்றை வரி, ஒற்றை கலாச்சாரம், ஒரே நாடு ஆக்கிவிட விரும்புகிறது. அதை கொண்டு வர முடியாது. காரணம் கோமாதா Vs காளை அடக்குபவர்களுக்குமான போராட்டம் இங்கு நடக்கிறது. மக்கள் ஒன்றுபடுத்த தலைவனில்லை. கட்சியில்லை. 2020ல் காந்தி இருந்த போது ஏற்பட்ட நிலைமை இருக்காது. எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களே போராடினார்கள். முறியடித்தனர். இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு அமைப்புகள் துணை நின்றார்கள் நாமும் சேர்ந்து அவர்களுக்காக போராடினோம்.

வழக்கு சுமந்தோம், சிறை சென்றோம். எந்த தலைவர்கள் வந்தார்கள். பாஜக, அதிமுக வர வேண்டாம் என்பதானால் திமுக 39 எம்பி வெற்றி பெற்றனர். இதனால் திமுக முன்னெச்சரிக்கையாக 2 கோடி கையெழுத்து பெற்றது. சிஏஏ அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி முடிய போகிறது எடப்பாடி மக்கள் மத்தியில் வந்தே ஆக வேண்டும்.

மக்களை சந்திக்க வரும் அதிமுக அமைச்சர்களை கேள்வி கேளுங்கள். தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளது. பட்ஜெட்டில் பற்றாக்குறை பட்ஜெட் தான் உள்ளது. உற்பத்தி மந்த நிலை. வியாபாரம் இல்லை. 5 மில்லியன் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. பொதுதுத்துறை தனியார் மயமாகும். இப்படி இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

 



நேருக்கு நேராக போராடி  மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டாமல் வேறு வழிஇல்லை. இனி இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை, பெண்கள், உழைக்கும் மக்கள் போராட வாருங்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வாருங்கள். வண்ணாரப் பேட்டையில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது.

கோலம் போட்டவர்களை கைது செய்கிறார்கள். காவல் துறை தடை, நீதிமன்ற தடைக்கு பிறகு தான் போராட்டம் தொடர்கிறது. காஷ்மீரில்  மக்களை சிறை வைத்தனர். அப்போதும் எழுச்சி ஏற்படவில்லை,  பாபர் மசூதி தீர்ப்பின் போது எழுச்சி வர வில்லை. புதிய கல்வி கொள்கை, உபா சட்டத் திருத்தம் என எப்போதும் எழுச்சி வரவில்லை. தற்போது இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மொத்த மக்களையும் ஒழிப்பதே இவர்களின் நோக்கம். மக்களை அச்சுறுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதே பாசிசம். அதை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்யும்.

போராட்டமே இதற்கு தீர்வு. உச்ச நீதிமன்ற நீதிபதியே இங்கு வந்து ஜநாயகத்தை காப்பாற்றும் போராட அழைப்பு விடுத்து பேசி இருக்கிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சென்னையில் அரசியல் சட்டத்தை காப்பாற்ற மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்கிறார்கள். ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு. சிஏஏவை வைத்து மக்களை பிரித்து பாசிசத்தை செயல்படுத்தலாம் என ஆயுதத்தை ஏவியிருக்கிறார்கள். அதே ஆயுதத்தை வைத்து ஆர்எஸ்எஸ் , பாஜக கும்பலை ஆட்சியிலிருந்து மட்டுமல்லாமல் சமூகத்திலிருந்து துடைத்து எறிவது தான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில் மக்கள் பாடகர் கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம் சிறப்பான பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது