தமிழ்நாடு மட்டுமின்றிஇந்தியா முழுதும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராகபோராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை உட்பட தமிழகத்தின்பல்வேறு இடங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்துசந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கூற தமிழக அரசு இஸ்லாமிய அமைப்புகள்மற்றும் இஸ்லாமிய பிரதிநிதிகளுடன்சந்திப்புஒன்றைநாளை சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தஏற்பாடு செய்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
தமிழகதலைமைச்செயலாளர் சண்முகம்தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நாளை தமிழகசட்டப்பேரவை வளாகத்தில் மாலை 4 மணிக்குநடைபெற உள்ளது. சிறுபான்மையினரிடையே நிலவும் சந்தேகங்களை களைவதற்கானகூட்டம்இது என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை கூற தலைமைச்செயலாளர் சண்முகம் அழைப்புவிடுத்துள்ளார்.