Skip to main content

இந்த நேரத்திலும் விளம்பரமா! அமைச்சரை மறைமுகமமாக சாடும் அதிகாரிகள்...

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

கரோனா விவகாரத்தினால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்த நேரத்திலும் சுய விளம்பரத்திற்காக அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களை, தான் செல்லுமிடமெங்கும் அழைத்து பேட்டி என்கிற பெயரில் கும்மாளம் அடிப்பது பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் வேதனையடைய செய்துள்ளது.

கரோனா என்னும் கொடூர வைரஸ் உலகையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் நோய் தொற்றில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் பரவும் என்கிற அச்சத்தில் பொதுமக்களும், அதிகாரிகளும் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு அதாவது இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் பணம், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தது, இந்தத் திட்டம் 2ம் தேதி முதல் துவங்கியிருக்கிறது.

 

Advertising at this time too; Officials  the Minister


அத்துறையின் அமைச்சரான காமராஜ் தன்னுடைய சொந்த தொகுதி உள்ளிட்ட திருவாரூர் மாவட்டம் முழுவதும் தானே வந்து வழங்கிவைப்பதாக அதிகாரிகள், கட்சிக்காரர்களிடம் அறிவித்து மாவட்டம் முழுவதும் செல்கிறார். அவர் செல்லுமிடமெல்லாம் முன்கூட்டியே அதிகாரிகளிடம் கூறி பத்திரிகையாளர்களையும் தயார் படுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அதிகாரிகளும் மறுக்கமுடியாமல் பத்திரிக்கையாளர்களை தயங்கியபடியே இங்குவரவேண்டும், அங்கு வரவேண்டும் என அழைக்கிறார்களாம். அமைச்சர் காமராஜின் சொந்த தொகுதியான நன்னிலம் தொகுதியில், சன்னாநல்லூர், மாப்பிள்ளைகுப்பம், பேரளம், பூந்தோட்டம் என ஒரு ஏரியா பாக்கியில்லாமல் சென்று துவக்கிவைத்து பலரையும் கடுப்பேற்றினார்.

சொந்த தொகுதியோடு நிற்காமல் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட துர்காலய சாலையில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று நிவாரண பொருட்களை தன் கையால் வழங்கி துவக்கிவைத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைக் கூற, பத்திரிகையாளர்களோ இவ்வளவுதான் இனிமேல் எங்கேயும் வரமுடியாது. அவரு விளம்பரம் தேடிக்க எங்களை நோய்க்கு ஆளாக்கப்பார்க்குறாரா என கடிந்திருக்கின்றனர்.

இந்தசெய்தியை அதிகாரிகள் அமைச்சர் காதில்போட, திருவாரூர்ல இருக்கிறவங்களை விட்டுடுங்க, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் என எல்லா ஊர்லயும் பத்திரிகையாளர்கள் இருக்காங்களே அவங்களுக்கு சொல்லுங்க என கூறிவிட்டாராம், அதிகாரிகளும், அதிமுகவினரும் கைப்பிசைந்துகொண்டு பின்னால் சென்றிருக்கிறார்கள்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "எப்போதும் போலவே எல்லா இடத்துக்கும் பத்திரிகையாளர்களை கூப்பிடுறாரு, தினமும் இரண்டு பிரஸ்மீட்டாவது கொடுக்கிறார். இன்னைக்கு உள்ள சூழலுக்கு வெளியே நடமாடவே அச்சமா இருக்கு, பத்திரிகையாளர்களுக்கும் குடும்பம் இருக்கு, பத்திரிகையாளர்களுக்கென அரசு நிவாரணமாகவோ, சம்பளமாகவோ கொடுக்கிறதில்ல, பாதுகாப்பு உபகரணங்கள்கூட கிடையாது. ஆனால் அமைச்சருடைய சொந்த விளம்பரத்திற்கு எங்கே சென்றாலும் உடனே அழைத்து பிரஷ்மீட் கொடுக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது எல்லாருமே ஒரே இடத்தில் அடிச்சு மோதிக்கிட்டு நிற்குறாங்க. அங்குவருபவர்களில் யாரு உடம்புல என்ன இருக்குன்னு புரியமாட்டேங்குது. இதை அமைச்சர் உணரவும் மறுக்கிறார்." என்று கூறினார்.

அமைச்சர் தரப்போ, "அமைச்சர் யாரையும் அழைக்கிறது இல்ல, அவங்க பத்திரிகையதான் அழைக்கிறார், ஆனா மற்ற பத்திரிகையாளரும் வறாங்க என்ன செய்யமுடியும், வந்தவங்களையும் இடைவேளி விட்டுதான் சந்திக்கிறார்'' என்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.