Skip to main content

இந்த நேரத்திலும் விளம்பரமா! அமைச்சரை மறைமுகமமாக சாடும் அதிகாரிகள்...

Published on 03/04/2020 | Edited on 03/04/2020

கரோனா விவகாரத்தினால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்த நேரத்திலும் சுய விளம்பரத்திற்காக அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களை, தான் செல்லுமிடமெங்கும் அழைத்து பேட்டி என்கிற பெயரில் கும்மாளம் அடிப்பது பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் வேதனையடைய செய்துள்ளது.

கரோனா என்னும் கொடூர வைரஸ் உலகையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் நோய் தொற்றில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் பரவும் என்கிற அச்சத்தில் பொதுமக்களும், அதிகாரிகளும் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு அதாவது இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் பணம், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தது, இந்தத் திட்டம் 2ம் தேதி முதல் துவங்கியிருக்கிறது.

 

Advertising at this time too; Officials  the Minister


அத்துறையின் அமைச்சரான காமராஜ் தன்னுடைய சொந்த தொகுதி உள்ளிட்ட திருவாரூர் மாவட்டம் முழுவதும் தானே வந்து வழங்கிவைப்பதாக அதிகாரிகள், கட்சிக்காரர்களிடம் அறிவித்து மாவட்டம் முழுவதும் செல்கிறார். அவர் செல்லுமிடமெல்லாம் முன்கூட்டியே அதிகாரிகளிடம் கூறி பத்திரிகையாளர்களையும் தயார் படுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.

அதிகாரிகளும் மறுக்கமுடியாமல் பத்திரிக்கையாளர்களை தயங்கியபடியே இங்குவரவேண்டும், அங்கு வரவேண்டும் என அழைக்கிறார்களாம். அமைச்சர் காமராஜின் சொந்த தொகுதியான நன்னிலம் தொகுதியில், சன்னாநல்லூர், மாப்பிள்ளைகுப்பம், பேரளம், பூந்தோட்டம் என ஒரு ஏரியா பாக்கியில்லாமல் சென்று துவக்கிவைத்து பலரையும் கடுப்பேற்றினார்.

சொந்த தொகுதியோடு நிற்காமல் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட துர்காலய சாலையில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று நிவாரண பொருட்களை தன் கையால் வழங்கி துவக்கிவைத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைக் கூற, பத்திரிகையாளர்களோ இவ்வளவுதான் இனிமேல் எங்கேயும் வரமுடியாது. அவரு விளம்பரம் தேடிக்க எங்களை நோய்க்கு ஆளாக்கப்பார்க்குறாரா என கடிந்திருக்கின்றனர்.

இந்தசெய்தியை அதிகாரிகள் அமைச்சர் காதில்போட, திருவாரூர்ல இருக்கிறவங்களை விட்டுடுங்க, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் என எல்லா ஊர்லயும் பத்திரிகையாளர்கள் இருக்காங்களே அவங்களுக்கு சொல்லுங்க என கூறிவிட்டாராம், அதிகாரிகளும், அதிமுகவினரும் கைப்பிசைந்துகொண்டு பின்னால் சென்றிருக்கிறார்கள்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "எப்போதும் போலவே எல்லா இடத்துக்கும் பத்திரிகையாளர்களை கூப்பிடுறாரு, தினமும் இரண்டு பிரஸ்மீட்டாவது கொடுக்கிறார். இன்னைக்கு உள்ள சூழலுக்கு வெளியே நடமாடவே அச்சமா இருக்கு, பத்திரிகையாளர்களுக்கும் குடும்பம் இருக்கு, பத்திரிகையாளர்களுக்கென அரசு நிவாரணமாகவோ, சம்பளமாகவோ கொடுக்கிறதில்ல, பாதுகாப்பு உபகரணங்கள்கூட கிடையாது. ஆனால் அமைச்சருடைய சொந்த விளம்பரத்திற்கு எங்கே சென்றாலும் உடனே அழைத்து பிரஷ்மீட் கொடுக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது எல்லாருமே ஒரே இடத்தில் அடிச்சு மோதிக்கிட்டு நிற்குறாங்க. அங்குவருபவர்களில் யாரு உடம்புல என்ன இருக்குன்னு புரியமாட்டேங்குது. இதை அமைச்சர் உணரவும் மறுக்கிறார்." என்று கூறினார்.

அமைச்சர் தரப்போ, "அமைச்சர் யாரையும் அழைக்கிறது இல்ல, அவங்க பத்திரிகையதான் அழைக்கிறார், ஆனா மற்ற பத்திரிகையாளரும் வறாங்க என்ன செய்யமுடியும், வந்தவங்களையும் இடைவேளி விட்டுதான் சந்திக்கிறார்'' என்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.