Skip to main content

’’சீட் கொடுக்காவிட்டால் சுயேட்சையாக போட்டி...’’-மிரட்டும் மார்க்கண்டேயன்.!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

விளாத்திகுளம் தொகுதியில் எப்படியும் மார்க்கண்டேயனுக்குத் தான் 'சீட்' என்று அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை நம்பி இருந்தனர். ஆனால், இப்போது அதிமுக தலைமை சின்னப்பனுக்கு 'சீட்' என்றதுமே ஜெயிக்கிற தொகுதியை ஏன் விட்டுக் கொடுக்கனும் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. 

 

'சாதி ரீதியாக பார்த்தால் சின்னப்பனும், மார்க்கண்டேயனும் ஒரே சமூகத்தவர் தான். ஆனால், மார்க்கண்டேயனோட அணுகுமுறை சின்னப்பன்கிட்ட எதிர்பார்க்க முடியாது. உங்க கிட்ட 5 நிமிசம் பேசினார்னா உங்களையே அப்படியே மெஸ்மெரிசம் பண்ணிடுவார் மார்க்கண்டேயன். அதே மாதிரி உதவின்னு கேட்டுப் போனால் உடனே செஞ்சு கொடுப்பார். ஆனா, இவரு (சின்னப்பன்) அதற்கு நேர் மாறான ஆள்' என்று நம்மிடம் ஆதங்கத்தை கொட்டினார் அந்த கிளைச் செயலாளர்.

 

vi

 

அவரே தொடர்ந்து, 'இது பொதுத் தேர்தல் இல்ல தம்பி, இடைத் தேர்தல். ஆளுங்கட்சியாக இருந்துட்டு இதுல தோல்வியடைஞ்சா கட்சிக்கு தான அது அவமானம்.? இந்த பக்கம் புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மார்க்கண்டேயனுக்குத் தான் செல்வாக்கு அதிகம். அதேபோல், விளாத்திகுளம் ஒன்றியத்தில பாதி கிராமங்கள்ல இவருக்கு செல்வாக்கு அதிகம். இவருக்குன்னா கட்சிக்காரங்க துணிஞ்சு களத்தில இறங்கி வேலை பார்ப்பாங்க. இப்ப சின்னப்பனுக்கு கோவில்பட்டியில் இருந்து தான் ஆட்களை கூட்டி வந்து மந்திரி கடம்பூரார் வேலை பார்க்கனும். அவங்களுக்கு உள்ளூர் நிலவரம் தெரியுமா? எந்த பார்ட்டி நமக்கு ஓட்டுப் போடும், எந்த பார்ட்டி எதிர்தரப்புக்கு ஓட்டுப் போடும்னு இங்க உள்ள கட்சிக் காரங்களுக்கு தான் தெரியும். வெளியூர் ஆட்களுக்கு என்ன தெரியும்?' என்று எதிர்கேள்வி கேட்டார்.

 

இந்த விவகாரம் குறித்து மார்க்கண்டேயனுக்கு நெருக்கமான நபர் ஒருவரிடம் பேசினோம். 'விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவுக்கு என்று செல்வாக்கு இருக்கு. அதை மறுக்க முடியாது. ஆனால், ஜெயிக்கிற வேட்பாளரை நிறுத்தாமல், எதிர் தரப்புக்கு ஏன் தொகுதியை விட்டுக் கொடுக்கிற மாதிரி வேட்பாளரை நிறுத்தனும் என்பது தான் எங்களோட கேள்வி. நிச்சயம் இதை மார்க்கண்டேயன் லேசில விடமாட்டார். ஒன்னு சுயேட்சையாக நிற்பார். இல்லாட்டி, உள்ளடி வேலை பார்த்து தோற்கடிப்பார். இரண்டுல ஏதாவது ஒன்னு நடக்கும். 

 

ஏற்கனவே, இவருக்கும் கடம்பூராருக்கும் ஆகாது. இந்த நிலையில் நேர்காணலுக்கு வந்தவரிடம் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவை போய் பார்த்துட்டு வாங்கன்னு கட்சித் தலைமை சொல்லியிருக்கிறது. அப்படி அவர்கிட்ட போய் நின்னு 'சீட்' வாங்க வேண்டிய அவசியமில்லைனு நேரடியாகவே சொல்லிட்டு வந்திட்டார். சி.த.செல்லப்பாண்டியனோ, சண்முகநாதனோ மாவட்ட செயலாளராக இருந்து, வேறு ஒருவருக்கு சீட் கொடுத்தாலும், அதை இவர் (மார்க்கண்டேயன்) ஏத்துக்கிடுவார். ஆனால், கடம்பூரார்கிட்ட தோற்றுப் போவதை ஏற்க மாட்டார்' என்றார்.

 

இதற்கிடையே, சுயேட்சையாக களம் இறங்கவும் மார்க்கண்டேயன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ஆலோசிக்க தமது ஆதரவாளர்களை நாளை (19-03-2019) தனது வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார். அதேபோல், டிடிவி தினகரன் தரப்பும் மார்க்கண்டேயனை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் தான், விளாத்திகுளம் தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது அ.ம.மு.க.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.