Skip to main content

விஜயபாஸ்கர் பக்கத்தில் இருக்கும்போதே ‘குட்கா புகழ் அமைச்சர்’என்று பேசிய பிரேமலதா- கூட்டத்தில் சலசலப்பு

Published on 05/04/2019 | Edited on 05/04/2019


அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் வருவார் பேசமாட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் பிரேமலதா சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.  இன்று திருச்சி தொகுதியில் உள்ள புதுக்கோட்டையில்  தேமுதிக வேட்பாளர் வி.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்து புதுக்கோட்டையில் பிரேமலதா பேசினார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தயது.

  

g

 

புதுக்கோட்டை மாவட்டத்தில்  இருந்து ராணுவத்தில் அதிகமானோர் இருப்பது பெருமைக்குரியது. இந்த மாவட்டத்தில் தான் அதிகமான ஏரி,குளங்கள் உள்ளது. ஆனால் அதில் தண்ணீர் இல்லை. அதனால் மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

 

கந்தர்வக்கோட்டையில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படுவதுடன் புதுக்கோட்டையில போக்குவரத்து நெரிசலை போக்குவதற்காக  சுற்றுவட்டச் சாலையும், புதிய மேம்பாலங்களும் அமைக்கப்படும்.

 
   சிப்காட் பகுதியில புதிய தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன்  புதுக்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும்.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.  


    புதுக்கோட்டையில் உள்ள புதுக்குளத்தை மீண்டும் படகு போக்குவரத்து வசதியுடன் மேம்படுத்தப்படும். மாநில அரசும், மத்திய அரசும் இந்தக் கூட்டணியில்தான உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் இந்தக் கூட்டணியே வெற்றி பெறும்.  இந்தக் கூட்டணி மக்களுக்கு என்னென்ன செய்யும் என்று வாக்குறுதி அளித்து வருகிறது. ஆனால், ஸ்டாலின் எப்போதும் குறை சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். 
  

குட்கா புகழ் அமைச்சர் என்று விஜயபாஸ்கரை ஸ்டாலின் சொல்கிறார் என்ற போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதைப் பார்த்து,  ஸ்டாலின் அப்படி சொல்கிறார் என்றார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் அதே வேனில் இருந்தார்.  அதனால் 'குறை சொல்வதில் புகழ்பெற்ற ஸ்டாலின்' என்று பட்டம் கொடுப்போம்.  பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்று சொல்லி வாக்குசேகரிக்கிறோம்.  ஆனால், அந்தக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் உறுதியாக கூறமுடியுமா?

 

 புல்வாமா தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடியும், ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தும் அளவுக்கு நம் நாடு ராணுவ வலிமையோடு உள்ளது பிரதமரின் சாதனையாகும். 
சாதிக்பாட்ஷா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் யார் என்று  ஸ்டாலின் சொல்லிவிட்டு கொடநாடு கொலைகளில் அண்ணன் எடப்பாடியை சம்மந்தப்படுத்தி  அவர் பேசட்டும். அதிகமான இளைஞர்கள், அதிகமான பெண்கள், உழைப்பவர்களைக் கொண்டுள்ளது இந்தக் கூட்டணி. ஆனால், அது ஊழல் செய்வதிலும்  ஏமாற்றுவதிலும்தான் வலிமையான கூட்டணி.


 2011-ல்  ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து அமைக்கப்பட்ட அதே கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் வெற்றி  பெறுவது உறுதி.   எதிர்த்து போட்டியிடுவோரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.  இத்தேர்தலில் எனது பிரச்சார பயணத்தில் இதுவரை கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கே வாக்கு சேகரித்துவிட்டு இன்றுதான் முரசு சின்னத்தில் வாக்கு சேகரிக்கிறேன். 


  கேப்டன் நன்றாக இருக்கிறார். உங்களை விசாரித்ததாக சொல்ல சொன்னார். லைவ் டெலிகாஸ்ட் பார்த்துக் கொண்டு இருக்கிறார். வெகு விரைவில் மக்களை சந்திப்பார் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.