Skip to main content

’வெளியூர் வேட்பாளர்களை கட்சிக்காரங்க ஏற்கல..’- உண்மையை உடைத்த அமைச்சர்

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

 


அதிமுக, திமுக கூட்டணிகளில் சொந்த தொகுதி வேட்பாளர்களை நிறுத்துவதைவிட தொகுதி மாற்றி நிறுத்தப்பட்டுள்ளது அனைத்துக் கட்சியிலும் உள்ளது. ஆனால் தொகுதியை இழந்த புதுக்கோட்டை மக்களுக்கு ஆறுதலாக திருச்சி தொகுதியில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் திருநாவுக்கரசரும் அமமுக சாருபாலா தொண்டைமானும் நிறுத்தப்பட்டுள்ளனர்.  மற்ற தொகுதிகளில் மற்ற மாவட்ட வேட்பாளர்களே போட்டி யாளர்களாக உள்ளனர்.


  

ba

 

இந்த நிலையில் தான் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணியில் சேலத்திலிருந்து தேமுதிக வேட்பாளராக டாக்டர் இளங்கோவனை தேர்வு செய்து அழைத்து வந்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். முதல் நாள் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே நான் அமைச்சர் போல ஏமாளி என்று சொன்னார் இளங்கோவன்.  இந்த நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார்கள்.

 

 அந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் இளங்கோவன்,  வேட்புமனு என்னது.. ஆனா வேட்பாளர் நான் இல்ல என்றார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை செயlல்படுத்துவேன் இல்லன்னா ராஜினாமா செய்வேன் என்றெல்லாம் பேசினார். 


அதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,    ஈழத்தமிழர் பிரச்சனைக்கு காங்கிரஸ் திமுக தான் காரணம். காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றவர்,  எல்லாரும் கேமராவை ஆஃப் பண்ணுங்க என்று சொல்லிவிட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி தலைவர்களையும் வேட்பாளர்களையும் குற்றம் சொல்லியே பேசி முடித்தவர் வெளியே வரும் போது மீடியா நண்பர்களை அழைத்து.. வீடியோ எடுக்காதீங்கன்னு சொன்னதுக்கு தப்பா எடுத்துக்காதீங்க.. வெளியூர் வேட்பாளர்களை நம்ம மக்கள் ஏற்கல.. கொஞ்சம் மந்தமா இருக்காங்க.  அதனால அவங்களை உற்சாகப்படுத்த தான் அப்படி பேசினேன் என்றார்.


  இதை கேட்டுக் கொண்டிருந்த ர. ர. க்கள் சிலர்.. மாவட்டத்துல இருக்கிற அதிமுக நிர்வாகிகளையே கூட்டத்துல காணும் அழைப்பு இல்ல.. அப்பறம் எப்படி உற்சாகமா வேலை செய்வாங்க. வீடியோ வெளியானா அமைச்சர் பேச்சுக்கு எதிர் பேச்சா அவரோட வழக்குகள் பற்றி எல்லாம் பேசுவாங்களே அதனால தான் எதிர் கட்சியினரை வசை பாடியதை வெளியே விடவேண்டாம்னு சொல்றார்.  எப்படி எங்க அமைச்சரின் தந்திரம் என்று சிரித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.