தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம்,கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனதீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால்கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம்,வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
அதிமுகதனதுகூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தமாகா துணைத்தலைவர் தங்கம், வெங்கேடசன் ஆகியோர்சென்னையில் உள்ள அமைச்சர் வேலுமணியின்இல்லத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுகவிடம் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட12தொகுதிகளைதமாகாகேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.