Skip to main content

அதிமுக பிரமுகர்  கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சரண்..!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

admk realestate broker passes away accused surrenders

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்தவர் திருமாறன் (வயது 50). அதிமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் மேன் பவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (24.04.2021) மறைமலை நகர் முத்துக்குமாரசாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல்  திருமாறன் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் கோயில் பிரசாதம் வாங்க வந்த பக்தர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில், தப்பி ஓடிய கொலையாளிகளை நோக்கி, திருமாறனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெடிகுண்டு வீசிய 4 நபர்களில் ஒருவரான சுரேஷ் என்பவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனர். 

 

இதுகுறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட திருமாறன் மற்றும் சுரேஷ் ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலை நகர் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ராஜேஸ் (வயது 48 ) என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி திரிவேணி முன்னிலையில் சரண் அடைந்தார்.

 

அவரிடம் தற்போது நீதிபதி வாக்குமூலம் பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட திருமாறனும் கொலையாளி ராஜேசும் கடந்த பல வருடங்களாக ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வந்துள்ளனர். ராஜேஷ் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், 3 கோடி ரூபாயை திருமாறனிடம் தந்து ரியல் எஸ்டேட் தொழில் துவங்குவதற்கு துணை புரிந்ததுடன் தானும் அதில் பார்ட்னராக இருந்துள்ளார். ராஜேஷ் கொடுத்த மூன்று கோடி ரூபாயை திருமாறன் திருப்பித் தர மறுத்தததுடன், அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜேஷ் முந்திக்கொண்டு திருமாறனை கொலை செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடிநீர் ட்ரம்மில் மிதந்த எலி; ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
A rat floated in a drinking water drum; Those who went to eat at the hotel were shocked

உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.