Skip to main content

“கந்தகபூமி பக்கம் கரோனா தலைகாட்டாதா? அட, போங்கப்பா..” - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சலிப்பு!

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

‘கந்தகபூமியான சிவகாசி பக்கம் கரோனா வைரஸ் வரவே வராது..’ என்று வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு பலர் ஊரடங்கை மீறி வெளியில் நடமாட, அத்தகைய மக்களுக்குப் புரியும் விதத்தில்,  பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ”கந்தகபூமி என்றால் கரோனா தலைகாட்டாதா? அட, போங்கப்பா..  அது எல்லா இடத்திலும் பரவும்.” என்று சலித்துக்கொண்டார்.  பிறகு வழக்கம்போல், “பிரதமர் மோடி இந்தியாவின் காவலனாக இருந்தும், முதல்வர் எடப்பாடியார் தமிழகத்தின் காவலராக இருந்தும் கரோனாவை விரட்டியடிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று பேசினார்.

 

ADMK Rajendra Bala about corona virus Impact



தனது சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் உட்பட 1000 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை (அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்கள்) தனது  சொந்த செலவில் வழங்கினார். 

சிவகாசியில் 4 பகுதிகளில் அமைக்கப்பட்ட  தற்காலிக காய்கறி கடைகளுக்கு விசிட் அடித்த ராஜேந்திரபாலாஜி, “சரியான விலைக்கு காய்கறியை விற்கணும். ரேட்டை கூட்டி விற்கக்கூடாது. மாஸ்க் அணிந்துதான் காய்கறி விற்பனை செய்யவேண்டும்.” என்று அறிவுறுத்தினார். 

கரோனா அச்சுறுத்தலில் வீட்டுக்குள் மக்கள் முடங்கியிருக்கும் வேளையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோர் மக்களைச் சந்திப்பதும், அறிவுறுத்துவதும், உதவுவதும் அவசியமானதே!

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.