Skip to main content

அதிமுகவில் மீண்டும் இணைய வருமாறு 18 எம்.எல்.ஏக்களுக்கு ‘நமது அம்மா’ மறைமுக அழைப்பு!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் மீண்டும் அதிமுகவில் இணைய வருமாறு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கவிதை ஒன்று வெளியாகி உள்ளது. அதில்,

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் அதிமுக நிழலில் ஒதுங்க ஜெயலலிதா ஆன்மா அனுமதிக்காது என சசிகலா குடும்பத்தினர் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

அம்மா விரும்பாதது அண்ணா திமுகவில் அணுவளவும் அரும்பாது என்பதையும் நீதிமன்றத் தீர்ப்பாக நிகழ்காலம் சொன்னது என 18 எம்.ஏல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.

பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பரிவட்டம் சூடியோர் பாசத்தாயின் இயக்கத்தை விட்டு தாய் வெறுத்த கூட்டத்திடம் தஞ்சமைடந்து தவறிழைக்க’என ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரது பரிந்துரையால் வெற்றிப் பெற்றவர்கள், அவர் வெறுத்த கூட்டத்திடம் தஞ்சமடைந்து தவறிழைத்ததால் எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டனர்.

’இன்று அவர்கள் அம்மா கொடுத்த எம்.எல்.ஏ பதவியை இழந்தவராகி பரிதவிப்பில் கிடக்க ’ 18 பேரும் பரிதவித்து கிடக்க ஜெயலலிதாவால் வெறுக்கப்பட்டவர் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார் என்றும் ’இந்த நரி சூழ்ச்சியை உணர்வதும் அம்மாவின் சூளுரையை உதிர்த்து உணர்வாக்கி ஒன்றாக்கி எழுவதும் தான் நன்றி கொண்டோர் காரியம்’ என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் மீண்டும் இணைய வருமாறு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'நமது அம்மா' நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் விலகல்! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Maruthu Alaguraj withdraws from 'Namadu Amma' daily!

 

'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

 

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை பதவிக்காக மாறி மாறி மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், இரு தரப்பு ஆதரவாளர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

'நமது அம்மா' நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கம்! 

Published on 26/06/2022 | Edited on 26/06/2022

 

From the responsibility of our mother newspaper O.P.S. Dismissed!

 

அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், 'நமது அம்மா' நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார். 

 

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நேற்றைய பதிப்பில் நிறுவனர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என பெயர் இருந்த நிலையில், இன்று (26/06/2022) வெளியான 'நமது அம்மா' நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இன்று வெளியான அந்த நாளிதழில் 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் எடப்பாடி பழனிசாமி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம் பெறவில்லை. 

 

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் படம் அகற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

அ.தி.மு.க.வில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியிருந்த நிலையில், நமது அம்மா நாளிதழ் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருப்பது அவரது தரப்பு ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.