Skip to main content

காதல் விவகாரம்; அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் கொலை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

ADMK panchayat president leader hacked to passed away in Tiruvarur

 

வலங்கைமான் அருகே முன்விரோதத்தால் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பந்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது  மகன் பன்னீர்செல்வம்(55). இவர் அதிமுக அரையூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார். இவரது அண்ணன் மகன் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகளை நீண்டகாலமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்குமான காதல் விவகாரத்தை இருதரப்பு வீட்டாரும் கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

 

இத்தகைய சூழலில், நீடாமங்கலம் அருகே கொட்டையூர் என்கிற பகுதி வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை வழிமறித்த மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் கொலை வெறியுடன் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தி சாய்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பன்னீர்செல்வத்தின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியினர் அவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இந்தக் கொலை முன்விரோதத்தால் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்கிற கோணத்தில் வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், சங்கர் என்பவரது மகன் விஜயனைக் கைது செய்துள்ளனர்.

 

உயிரிழந்த ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வத்தின் மனைவி மனோமணி கூறுகையில், “தனது கணவர் எந்தப் பிரச்சனைக்கும் போகமாட்டார். அவருடைய அண்ணன் மகன் பிரச்சனையில் பஞ்சாயத்து பேசியதாகக் கூறி சங்கர் மகன் விஜயன் அவரது கூட்டாளிகளை அழைத்து வந்து  வீட்டிற்கு அருகில் மது குடித்துவிட்டு தவறாகப் பேசி கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டினார். சொன்னது மாதிரியே எனது கணவரை கொலை செய்துட்டாங்க. அவரை விஜயன் மட்டும் கொலை செய்யவில்லை. அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்துதான் கொலை செய்திருக்கிறார்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.