Skip to main content

ஆய்வின்போது செருப்பை கையில் தூக்கியபடி நடந்த ஓ.பி.எஸ்.!-ஆற்றின் புனிதம் காப்பது இயல்பாம்!  

Published on 01/11/2020 | Edited on 01/11/2020

 

சில நேரங்களில் சில தலைவர்களின் பண்பு வியப்புக்குரியதாக இருக்கும்.  அப்படித்தான், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயலொன்று, பலரையும் வியக்க வைத்துள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள மலைகிராமம் மேலப்பரவு. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 50 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியைச் சுற்றிலும்,  நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்தப் பகுதியின் குறுக்கே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், குரங்கணி கொட்டகுடி ஆறு செல்வதால், மழைக்காலங்களிலும், பருவ மழைக் காலங்களிலும். ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடும். 

இந்தச் சூழ்நிலையில், இங்குள்ள மக்களும், விவசாயிகளும், விளைபொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும், நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆற்றைக் கடக்க முடியாமலும், இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். அம்மக்கள் வசிக்கின்ற வீடுகளும் மிகவும் சேதமடைந்துள்ளன.

இங்குள்ள மலைவாழ் மக்களின் குறைகளை நேரில் கேட்டறிவதற்காக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதிக்குச் சென்றார். அங்கு வசிக்கும் 50 குடும்பங்களுக்கு, உடனடியாக புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிட்டார். பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக சாலைப் பணிகளை விரைந்து முடித்திட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஓ.பி.எஸ்., ஆய்வுக்காகச் சென்றபோது, ஆற்றில் இறங்கி கடக்க வேண்டியதிருந்தது. அப்போது, தன் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி,  தானே கையில் எடுத்துக்கொண்டு நடந்தார்.  ‘என்னிடம் கொடுங்க..’ என்று உதவியாளர் கேட்டும் தரமறுத்து, ஒரு கையால் செருப்பைத் தூக்கியபடியே நடந்தார். 

ஓ.பன்னீர்செல்வத்துக்கு  நெருக்கமான  பிரமுகர் ஒருவர்  “பிரயாணத்தின்போது, தன்னுடைய சூட்கேஸைக்கூட, உதவியாளர் யாரையும் தூக்கவிட மாட்டார்.  ஆறோ, நதியோ, அதன் புனிதத்தைக் காக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.  செருப்பு அணிந்துகொண்டு, ஆற்றில் இறங்க மாட்டார். நீர்ப்பகுதிகளில் வெறும் காலால்தான் நடப்பார். குரங்கணி கொட்டகுடி ஆற்றைக் கடந்தபோதும், அவ்வாறே நடந்துகொண்டார். அவரைப் பொறுத்தமட்டிலும்,  இது ஒன்றும் செயற்கரிய செயலல்ல. பொதுவான அவரது இயல்பே இதுதான்!” என்றார். 

ஒரு சில நடவடிக்கைகளில், மற்ற அரசியல் தலைவர்களிலிருந்து மாறுபட்டு, ஓ.பன்னீர்செல்வம் மட்டும் தனித்து தெரியும்போது, ‘சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ என்ற ஔவையின் மூதுரை பொருந்திப் போகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.