கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி, மனிதசமூகத்திற்கும் நவீன அறிவியலுக்கும் சவாலாக அமைந்துள்ளது. தமிழகத்தில் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட எல்லையான காட்ரோடு சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் அறிகுறி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.