ADVERTISEMENT

அமைச்சருக்கு கரோனா; மறைத்த அதிகாரிகள்... டோஸ் விட்ட முதல்வர்

11:58 AM Sep 09, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செப்டம்பர் 9ம் தேதி திருவண்ணாமலை வந்தார். முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், அதிகாரிகள், அவரை சந்திப்பவர்கள், நலத்திட்ட உதவி பெறுபவர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, அவர்களுக்கு நெகட்டிவ் என முடிவு வந்திருப்பவர்களை மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்க வேண்டும் என முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவிடப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் உட்பட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் உட்பட மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் என சுமார் 800 பேருக்கு கரோனா பரிசோதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஆரணி சுற்றுலா மாளிகை, மருத்துவமனை வளாகம் என இதற்கென சில இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


ஆரணியில் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், அவரது உதவியாளர், கார் ஓட்டுநர், எஸ்கார்ட், கட்சி முக்கிய பிரமுகர்கள் செப்டம்பர் 7ம் தேதி பரிசோதனை செய்துகொண்டனர். அவர்களுக்கான முடிவு செப்டம்பர் 8ம் தேதி காலையே வந்துவிட்டது. இதில் அமைச்சருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தத் தகவல் மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதனை வெளியே சொல்லாமல் அப்படியே சைலண்டாக இருந்துள்ளனர்.


இந்தத் தகவல் செப்டம்பர் 8ம் தேதி மாலை முதல்வர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர். எப்போது முடிவு வந்தது எனக்கேட்டு டென்ஷனான அவர், உடனே அமைச்சரின் லைனுக்கு சென்று அவரை சென்னைக்கு வரச்சொல்லி, மருத்துவமனையில் அட்மிட்டாக சொல்லியுள்ளார். அமைச்சர் தனது உதவியாளருடன் ஆரணியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.


அமைச்சர் தனக்கு கரோனா என்பதை மறைத்து முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்குச் சாதகமாக அதிகாரிகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் விவகாரம் தெரிந்து முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை செய்து அவரை மருத்துவமனையில் அட்மிட்டாக செய்தது பரபரப்பாகியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT