Advertisment

அதிமுக எம் எல் ஏ வீட்டு முன்பு கட்சி தொண்டர் தீக்குளிக்க முயற்சி❗

இன்று காலை உளுந்தூர்பேட்டை அதிமுக எம். எல். ஏவும் கட்சி மாவட்ட செயலாளருமான குமரகுரு, வீட்டு முன்பு இன்று காலை சுமார் 11 மணியளவில் சின்ன குப்பத்தை சேர்ந்த கட்சியின் தீவிர தொண்டரான சின்னப் பையன் என்பவர் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தீ குளிக்கப் போவதாக சத்தம் போட அக்கம் பக்கம் இருந்தவர்கள் கும்பல் கூடி விட்டனர் சின்னப் பையனின் செயலை எம் எல் ஏ பி ஏசுரேஷ் மற்றும் அங்கிருந்த கட்சி காரர்கள் தடுத்தனர்.

Advertisment

அதோடு ஏன் இந்த முடிவு என்று சின்னப் பையனை போலீஸ் பாணியில் அன்போடு விசாரிக்க சின்னப் பையனோ நான் எம் எல் ஏவிடம் கிணறு தோண்டும் ஒப்பந்தம்(காண்ட்ராக்ட்) எனக்கு கேட்டிருந்தேன். தருவதாக சொன்னவர் தரவில்லை. அந்த கோபத்தில் தான் இந்த முடிவு என்று சொல்லி சின்ன பையன் கண்ணை கசக்சினார் அங்கிருந்த எம் எல் ஏபி சுரேஷ் "அடப்பாவி உன் பெயருக்கு கிணறு வெட்டும் ஒப்பந்தம் தரச் சொல்லி எம் எல் ஏ திருநாவலூர் யூனியன் பி.டீ.ஓவுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்து விட்டார்.

Advertisment

suicide attempt

இது தெரியாம இங்கு வந்து இப்படி ஒரு விபரீத முடிவா?" என்று கண்டித்து அனுப்பியுள்ளர். பறந்து போன சின்ன பையன் திருநாவலூர் பி.டீ.ஓவை சந்தித்து ஒப்பந்தம் தனக்கு தரப்பட்டுள்ளதை உறுதி செய்ததோடு அதிகாரிகளை கிணறு தோண்ட போகும் இடத்திற்க்கே அழைத்து சென்று அடையாளம் காட்ட சொல்லி உறுதி செய்த பிறகே வீட்டுக்கு சென்றுள்ளார்.

சின்ன பையன் என் கிணற்றை காணோம் என்று வடிவேலு போலீசில் புகார் கொடுத்ததை போல என் காண்ராக்ட் கிணறு என்னாச்சி என்று எம். எல். ஏ வீட்டு முன்பு நியாயம் கேட்டு தீ குளிப்பு போராட்டத்தில் இறங்கி பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

admk incident villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe