Advertisment

ஓபிஎஸ், இபிஎஸ் உடன் அமைச்சர்கள் மாறி மாறி சந்திப்பு!

jhk

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் தொடர்ந்துசந்தித்துப் பேசி வருகிறார்கள்.

Advertisment

கடந்த ஒரு மாதமாகவே அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அ.தி.மு.க.வில் இதுதொடர்பாக யாரும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனையடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்தப் பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது.

Advertisment

பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் காரசாரமாகப் பேசியதாக தகவல்கள் வெளியாகியது. இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களைப் பேசி தீர்ப்பதற்காகநேற்று செயற்குழுக் கூட்டம் அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக வரும் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில், தற்போது முதல்வர் பழனிசாமியை அவரது வீட்டில் அமைச்சர் வேலுமணி இன்று மாலைசந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு நந்தம் விஸ்வநாதன் தற்போது அவருடன் சந்தித்துப் பேசி வருகிறார். இந்நிலையில் அமைச்சர் உதயகுமார் துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டில் அவரை சந்த்தித்து வருகிறார்.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe