ADVERTISEMENT
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என களத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
ADVERTISEMENT
இந்நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ முழுமையாக குணம் அடைந்து விட்டார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Show comments