Skip to main content

“பிரதமர் மன்னிப்பு கேட்கிறார்; முதல்வர் சிரமமின்றி பார்த்துக்கொள்கிறார்!” -கிருமிநாசினி தெளித்துவிட்டு கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பகுதிகளில் தீயணைப்பு வீரர்களுடன் தானும் இணைந்து, தமிழக  பால்வளத் துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திரபாலாஜி கிருமி நாசினி தெளித்தார்.

கரோனா வைரைஸை கட்டுப்படுத்துவதற்காக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

admk minister rajendrabalaji press meet


இன்று, தனது தொகுதியிலுள்ள  சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில்  அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்தார். திருத்தங்கல் நகராட்சி நிர்வாகம், சிவகாசி நகராட்சி நிர்வாகம், தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சகிதமாக இன்று களமிறங்கி, தானே கிருமிநாசினி தெளித்தார். பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கினார்.

சிறிய இடைவெளிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.டி.ராஜேந்திரபாலாஜி, 

 

admk minister rajendrabalaji press meet


“நாட்டில் இதுபோன்று இதற்கு முன்னர் வந்ததில்லை. இதன் பாதிப்பினை மக்கள் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிறார்கள். பிரதமரும், முதல்வரும் பொதுமக்களிடம் கைகூப்பி வேண்டுகோள் விடுத்துள்ளனர். உங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டிற்கும் செய்யும் சேவை என வலியுறுத்துகின்றனர். சுகாதாரத் துறையினர் தீவிரமாகப் பணி செய்கின்றனர். கிராமப் பகுதியை கரோனா தாக்காது என நினைக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. மக்கள் தங்களுக்குள்ளாகவே தனிமைப்படுத்தி கொள்கின்றனர். ராஜபாளையத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா தாக்கியுள்ளது. அவர் மதுரையைச் சேர்ந்தவர்தான். ராணுவத்தினர் இங்கு வரவில்லை. மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வல்லரசு நாடுகளே அச்சத்தில் உள்ளன. நமது பிரதமர், கரம் கூப்பி மன்னிப்பு கேட்கிறார். முதல்வர் தினசரி நிகழ்வுகளைக் கேட்டறிகிறார். அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, மக்களுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொள்கிறார். தற்சமயம் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. விலை ஏற்றம் இல்லை. மற்ற நாட்களில் இருந்த அதே விலையில்தான் பொருட்கள் விற்கப்படுகிறது. ஆவின் விற்பனையில் எந்த குறையும் இல்லை. பாலகங்களில் 24 மணி நேரமும் மக்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.