Skip to main content

விலகியிருக்க வேண்டிய நேரத்தில் ஒன்றிணைய சொல்வதா? -மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020
admk minister KD Rajendrapalaji


ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது,

விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்.  தமிழக முதல்வர் எடப்பாடியார் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விருதுநகர் மாவட்ட அதிமுக மூலம் தொடர்ந்து நிவாரண பொருட்கள்  வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

 

admk minister KD Rajendrapalaji


நாட்டில் அரசியல் பேசக்கூடிய தருணம் இது கிடையாது. வீட்டில் இரு; விலகி இரு; தனித்திரு என்றுதான் பாரத பிரதமர், தமிழக முதல்வர் உட்பட உலக தலைவர்கள் கூறிவருகின்றனர். உலக தலைவர்கள் அனைவரும் விலகி இரு என்று கூறிவரும் நிலையில்,  திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறார். ஸ்டாலினை பொருத்தவரையில்,  கரோனா வைரஸை வைத்து அரசியல்தான் செய்கிறாரே தவிர,  மக்களை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவரை செல்போனில் இரண்டு நாளில் 2 லட்சம் பேர் தொடர்பு கொண்டனர் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றும் செயலில் ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதிமுகவினர் உதவி செய்து வருவதுபோல்,  திமுகவினரும் உதவி செய்ய வேண்டுமென்று ஸ்டாலின் கூற வேண்டுமே தவிர, அரசை குறைகூறிக் கொண்டே இருக்கக்கூடாது, அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஸ்டாலின் குறை கூறிக்கொண்டே இருக்கக் கூடாது. பிரச்சனைகள் வரும்போது பொதுமக்கள் தேடி வருவது ஆலயங்களையும், கோவில்களையும்தான்.  இறைவனுக்கு செய்யும் தொண்டு ஏழைகளுக்கு செய்யும் தொண்டுதான். எனவே இந்த நேரத்தில்,  ஜோதிகா கூறிய கருத்துகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கு,  மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வராது.”  என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.