Advertisment

'அ.தி.மு.கவிற்கு ராகுகாலம் எமகண்டம் எல்லாம் கிடையாது' - அமைச்சர் ஜெயக்குமார்!

admk minister jayakumar

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பானஅறிவிப்பை நாளை அ.தி.மு.க தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அ.தி.மு.க எப்போதுமே ராகு காலம், எமகண்டம் பார்க்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,ஒருமித்த கருத்து விரைவில் எட்டும் எனத்தெரிவித்தார். அவர் பேசுகையில், ''எப்பொழுதுமே ராகு காலம் எமகண்டம் இதெல்லாம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், ஆல் டேய்ஸ் ஆர் கோல்டன் டேய்ஸ். கடவுளுடைய படைப்பில் எல்லா நாளும் இனிய நாட்கள். ஒருமித்த கருத்து எட்டும். எல்லோருடைய ஒருமித்த கருத்தும் எட்டி அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலர வைக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு'' என்றார்.

Advertisment

admk jayakumar minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe