ADMK member passes away in chennai

Advertisment

சென்னை பெரம்பூர் கக்கன் ஜி காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதிமுக பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர், நேற்று இரவு கட்சி விஷயமாக வெளியே சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள், இளங்கோவனை வழிமறித்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இளங்கோவன் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று, வெட்டப்பட்டு இறந்து கிடந்த இளங்கோவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.