Skip to main content

அரசு நிலத்தை பட்டா போட்டு வாங்கிய அதிமுக பிரமுகர்... அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்! 

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

 ADMK Member who leased government land; Collector who took action!

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டாரத்தில் இருக்கும் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில், தேனி கலெக்டர் குடியிருப்பு உள்பட பல்வேறு துறையின் அலுவலகங்கள் மற்றும் ஆயுதப்படை மைதானம் ஆகியவை இருந்துவருகிறது. இந்தப் பகுதிகளில சர்வே எண் 814, 2184, 2201, 1046, 1051 ஆகிய புல எண்களுக்குக் கட்டுப்பட்ட நிலங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்களை முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான அதிமுக பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் ஒருவர் மோசடியாகத் தனது பெயரில் மாற்றியிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தன் பெயரில் மட்டுமின்றி தனது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பெயரிலும் மாற்றியிருக்கிறார். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அவர்களின் பினாமி பெயரிலும் பட்டா மாற்றம் செய்து கூட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. 

 

குறிப்பாகப் பெரியகுளம் முன்னாள் கோட்டாட்சியராக இருந்த ஜெயப்பிரியா, ஆனந்தி, தற்போது வட்டாட்சியராக இருக்கும் கிருஷ்ணகுமார், ஏற்கனவே இருந்த  வட்டாட்சியர்கள் இரத்தினத்தாலா, மோகராம், தென்கரை உள்வட்ட நில அளவர் பிச்சைமணி உள்பட சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி மோசடியாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட இடங்களைத் தற்போது வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனைகளாகப் பிரித்து படுஜோராக விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்துவந்தது.

 

 ADMK Member who leased government land; Collector who took action!
                                                   ஆட்சியர் முரளிதரன் 

 

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட சில பொதுமக்களும் புகார் செய்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு சிறப்பு ஆய்வுக் குழு அமைத்து, இந்தப் புகார்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசு விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது. அதை தொடர்ந்து பட்டா வழங்கப்பட்ட காலக்கட்டங்களில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளின் பட்டியலை ஆட்சியர் சேகரித்தார். அதன்படி சம்பவம் தொடர்பாக தற்போதைய பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்னபாலா, போடி துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிபட்டி துணை தாசில்தார் சஞ்சீவ் காந்தி ஆகிய 4 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.