ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

12:10 PM May 20, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "கொச்சியில் இருந்து அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்த 9 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'டவ்-தே' புயலில் சிக்கி மீனவர்கள் மாயமானதால், 9 பேரின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT