Skip to main content

அதிமுகவின் கட்டமைப்பில் அதிரடி! கனிமொழி பாணியில் எடப்பாடி பழனிசாமி!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

 ADMK - kanimozhi - edappadi palaniswami

 

அதிமுகவின் கட்டமைப்பில் பல மாற்றங்களை புகுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை அவரது சேலம் மாவட்டத்திலிருந்து துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது, திமுகவின் மாவட்ட எல்லைகள் குறித்து கட்சி சீனியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து கொண்டிருந்தார். மகளிர் அணி செயலாளர் என்கிற வகையில் கனிமொழியிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. 

 

 

 ADMK - kanimozhi - edappadi palaniswami


                           
அப்போது, ’’அரசியல் ரீதியாக பார்த்தால் சாதிய உணர்வுகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவைகளாகவே இருக்கின்றன. பெரும்பான்மை சமூகத்திற்கான முக்கியத்துவம் திமுகவில் மறுக்கப்படுவதாக குற்றசாட்டுகள் இருக்கிறது. அதனால், அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து, ஒரு மாவட்டத்திற்கு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலாளராகவும், மற்றொரு மாவட்டத்துக்கு சிறுபான்மையின சமூகத்திலிருக்கும் ஒருவரை மாவட்ட செயலாளராகவும் நியமிக்கலாம். மாவட்டங்களில் மட்டுமல்லாமல் நகர, ஒன்றிய, கிளைக்கழக அமைப்புகள் வரை இதனை அமல்படுத்தினால், பெரும்பான்மை சமூகத்தை திமுக புறக்கணிக்கிறது என்கிற குற்றச்சாட்டை தவிர்க்கலாம்’’ என்று கலைஞரிடம் தனது கருத்தாக சொன்னார். நல்ல யோசனையாக இருக்கிறது என சொன்ன கலைஞர், இந்த கருத்துகளை மகளிர் அணி சார்பில் ஒரு அறிக்கையாக தரச்சொல்லி கனிமொழியிடம் தெரிவிக்க, அதன்படி ஒரு அறிக்கையை தயாரித்துக் கொடுத்தார் கனிமொழி.

இதனை நடைமுறைப்படுத்த கலைஞர் முயற்சித்தார். முழுமையாக அதனை நிறைவேற்றுவதற்குள் கலைஞரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த யோசனை அப்படியே கிடப்பில் விழுந்தது. கலைஞரிடம் கனிமொழி யோசனை தெரிவித்த அந்த பாணியைத்தான் தற்போது கையிலெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி!


“முதல்வர் ஈ.பி.எஸ்.ஸும் துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய கட்சி சம்பந்தப்பட்ட ஆலோசனையில், இந்த யோசனையை ஈ.பி.எஸ். முன்வைத்திருக்கிறார். ஆரோக்கியமான யோசனைதான் என ஓபிஎஸ்ஸும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒன்றிய கழகங்களை உடைத்து ஒரு பகுதியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கும், மற்றொரு பகுதியில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்து, அதனை முதல் கட்டமாக தனது சேலம் மாவட்டத்திலிருந்து தொடங்க தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி” என்கிறார்கள் அதிமுகவினர். அதிமுக ஒன்றிய கழகங்களில் அமல்படுத்தப்படும் இந்த நடைமுறை, மாவட்ட கழகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அதிமுகவில் குரல் எதிரொலிக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.