குஜராத் மாநிலம் காந்தி நகரில் ரைசன் பகுதியில் வசித்து வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மோடியின் தாயார் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் வளர்மதி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.