அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சைஎழுந்ததை அடுத்து முதல்முறையாகஅ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்று முடிந்ததுள்ளது. இந்தக் கூட்டத்தில்அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்திற்கான,தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 28 -ஆம் தேதி காலை9.45 மணிக்குஅ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.
அதேபோல் இன்று நடந்தஉயர்நிலைஆலோசனைக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்ததாக ஓ.பி.எஸ், இ.பி.எஸ்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.