Skip to main content

அதிமுக வேட்பாளரை புறக்கணிக்கும் கட்சி நிர்வாகிகள்... 2 மணி நேரமாக தனி ஆளாக காத்திருப்பு

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஆம்பூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுகவில் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்களிடம் நேர்காணல் நடத்தி முடித்து மார்ச் 17-ம் தேதி இரவு அதிமுக சார்பில் மாதனூர் ஒன்றிய கழக செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார்.

 

admk

 

இந்த அறிவிப்பால் விருப்பமனு தாக்கல் செய்த 10-க்கும் மேற்பட்டோர் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் ஆம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்திருந்தார் ஆம்பூர் நகரக் கழகச் செயலாளர் மதியழகன். தனக்கு சிட் கிடைக்கவில்லை என்றதும் கோபமாகிவிட்டார். இந்நிலையில் நகரக் கழகச் செயலாளரை பார்ப்பதற்காக வேட்பாளர் ஜோதி ராமலிங்க ராஜா ஆம்பூர் வந்துள்ளார், வந்தவர் கட்சி அலுவலகத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறார். நகரக் கழகச் செயலாளர் செல்போன் அனைத்து  வைக்கப்பட்டுள்ளதால், அவரை பிடிக்க முடியவில்லை. இதனால் வேட்பாளர் அலுவலகத்தில் காத்திருக்கிறார். இது வேட்பாளரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்கள் மோதி விபத்து; 3 பேர் பலியான சோகம்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Car incident 3 people involved

இரு கார்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பச்சக்குப்பம் என்ற பகுதியில், இரு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்த்திசையில் வந்த கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், பெங்களுருவைச் சேர்ந்த மைத்தேரயன், பெண் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிக்கிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

ஆம்பூர் ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடிகை ஷகிலா சாமி தரிசனம்!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Actress Shakila Swamy Darshanam at Ambur Anjaneyar Temple

 

பிரியாணிக்கு பெயர் பெற்ற ஆம்பூரில் உள்ள ஒரு சின்ன ஆலயத்தில் பிரபல நடிகை சென்னையில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்தது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ. கஸ்பா பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் சனி பகவானை காலில் மிதித்தபடி காட்சி அளிக்கிறார். இங்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கினால், ராகு, கேது தோஷம், சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் ஆந்திரா, கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமீபகாலமாக வருகின்றனர். 

 

இந்நிலையில் நடிகை ஷகிலா தனது குடும்பத்துடன் வந்து ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், கோவிலில் விளக்கேற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.