AIADMK announces consultation meeting tomorrow

Advertisment

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து, அதனைத் தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெற்று முடிந்த நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் பிளவு காரணமாக அது தொடர்பான சிக்கல்கள் தற்பொழுது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

டெல்லி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழகம் வந்திருந்த நிலையில், அவருக்கு பல்வேறு இடங்களில் தொண்டர்கள் வரவேற்பளித்தனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் பெயர் இல்லாமல் தலைமை நிலையச் செயலாளர் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாளை காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.